Sunday, December 18, 2011

குவைத் தேர்தல்: பெண்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது - இஸ்லாமிய அறிஞர்கள்.

குவைத்: சமீபத்தில் குவைத் அரசு ராஜினாமா செய்ததை தொடர்ந்து வருகின்ற ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் பெண்கள் போட்டியிட கூடாது என்று இஸ்லாமிய அறிஞரும், ஷரியா மற்றும் இஸ்லாமிய கல்லூரியின் முன்னால் முதல்வருமான டாக்டர். அஜீல் அல்-நாஷ்மி தனது அறிக்கையில் கூறியுள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் "பெண்கள் தேர்தலில் ஒட்டு போடுவதற்கும், அவர்களுடைய உரிமைகளை கேட்டு பெறுவதற்கும் எந்த தடையும் இல்லை. ஏனென்றால் நபி(ஸல்) அவர்களின் காலம் முதல் எந்த பெண்களும் அரசு சம்பந்தமான அலுவல்களில் பங்கேற்றதாக வரலாறுகள் இல்லை. அதன் தொடர்ச்சியாக பெண்கள் அரசு அலுவல்களில் பங்கெடுக்கும் போது அந்நிய ஆடவருடன் பேசுவதற்கும், கலப்பதற்கும் வாய்ப்புள்ளது" என்றார்.

No comments:

Post a Comment