Friday, December 23, 2011

குண்டுவெடிப்பு வழக்குகளை முடக்குவதற்கு பாசிஸ்டுகள் சதி - பாப்புலர் ஃப்ரண்ட்

புதுடெல்லி: குண்டுவெடிப்பு வழக்குகளை முடக்குவதற்கு பாசிஸ்டுகள் சதி செய்கிறார்கள் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் இ.எம்.அப்துர்ரஹ்மான் கூறியிருக்கிறார். அவர் தனது அறிக்கையில் மேலும் கூறியதாவது " குண்டுவெடிப்பு வழக்கில் பாசிஸ்டுகளின் பங்களிப்பை பற்றி நடந்து வரும் விசாரணையை முடக்குவதற்கு தான் பாசிஸ்டுகள் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை பதவி விலக சொல்லி பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மலேகான், மக்கா மஸ்ஜித், அஜ்மீர், சம்ஜோத எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகளின் வேகம் குறைந்து வருவதை பார்க்கும் போது பாரதிய ஜனதா கட்சி எடுத்த முயற்சியில் வெற்றி பெற்று வருவதை நம்மால் உணர முடிகிறது.  
             ஒரு குழு திட்டம் போட்டு குண்டு வெடிப்புகளை நடத்தியிருப்பது தெளிவாக தெரியும் போது அவர்களை கைது செய்யாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது. ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக பதவி ஏற்ற பிறகு தான் குண்டுவெடிப்புகளில் பாசிஸ்டுகளின் பங்களிப்பை பற்றி தைரியமாக வெளிக்கொண்டுவந்தார். இதை மனதில் கொண்டு தான் பா.ஜ.க வினர் ப.சிதம்பரத்திற்கு எதிராக சதிகளை அரங்கேற்றிவருகின்றனர்."

No comments:

Post a Comment