Wednesday, October 3, 2012

நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக்கப்பட்ட ஆ.ராசா- கல்மாடி.. அப்போ ஊழல் விவகாரம்?

 Congress Nominates Raja Suresh Kalmadi
டெல்லி: நாடாளுமன்றத்தின் நிலைக்குழு உறுப்பினராக ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதாகி ஜாமீனில் உள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சரும் திமுக எம்பியுமான ஆ.ராசாவை காங்கிரஸ் நியமித்துள்ளது.

அதே போல காமன்வெல்த் ஊழலில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் சுரேஷ் கல்மாடியும் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். 
இதன்மூலம் இருவரது ஊழல்களையும் மத்திய அரசு லேசாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளது தெளிவாகிறது.
எரிசக்தித்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினராக ராசாவும், வெளி விவகாரத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் உறுப்பினராக கல்மாடியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

300 ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு "மாதாந்திர" நிதி உதவி!


கோழிக்கோட்டில் செயல்படும் "ஹோம் கேர் சென்டர்" மூலம், 300க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு மாதாந்திர நிதியாக தலா 1000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று  துவக்கப்பட்டது.
முதல் கட்டமாக, 4 வயதுக்கு மேற்பட்ட ஏழை மற்றும் பெற்றோரை இழந்த மாணவர்கள் இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.  தங்கள் வீட்டில் இருந்த படியே கல்வி பயிலும் வகையில், கண்ணூர் மற்றும் மலப்புரம் பகுதியை சேர்ந்த 300 மாணவவர்களின் பராமரிப்பு சிலவினங்களுக்காக மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

Monday, September 24, 2012

தஞ்சை முஸ்லிம் இளைஞர் இராணுவ இரகசியங்கள் கடத்தியதாகக் கைது உண்மை அறியும் குழு அறிக்கை

சென்ற 18ந்தேதி முதல் தமிழக ஊடகங்களில் தஞ்சையைச் சேர்ந்த தமிம் அன்சாரி என்னும் இளைஞன் இலங்கை வழியாக இராணுவ இரகசியங்களைப் பாகிஸ்தானுக்குக் கடத்தியதாக ஒரு செய்தி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. திருச்சி ‘கியூ’ பிரிவு போலீசார் அவரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர் (மு.த.அ எண் 1/2012. குற்றப் பிரிவுகள்; The Official Secret Act 3, 4 & 9 மற்றும் IPC 120(B)). இவருடன் சக குற்றவாளிகளாக இலங்கை கொழும்பு நகரைச் சேர்ந்த ஷாஜி மற்றும் லங்கா ஷாஜி ஆகியோரும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி அமீர் சுபைர் சித்திக் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் நாட்டு உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐயின் தென் ஆசியப் பகுதியின் முக்கிய முகவர்கள் என்பதாகவும் கியூ பிரிவு போலீசார் ஊடகங்களுக்குச் செய்திகள் தந்துள்ளனர்.

“மத விரோதம் காரணமாகவும் சொந்த லாபத்திற்காகவும்” தமிம் அன்சாரி இதைச் செய்துள்ளார் எனவும், (1) இந்தியாவை இஸ்லாமிய நாடாக்கும் நோக்கத்துடனும், (2) வட இந்தியாவைப் போல தென்னிந்தியாவிலும் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி இந்திய அரசை அச்சுறுத்தும் நோக்கத்துடனும் இச்சதி வேலை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கியூ பிரிவு போலீசார் கொடுத்துள்ள செய்தி காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் பெரிய அளவு முக்கியத்துவத்துடன் தொடர்ந்து வெளிவருகிறது.

Sunday, September 23, 2012

இறைத்தூதருக்கு அவமதிப்பு : விழிப்புணர்வு "பிரச்சார" போராட்டம்!


இறைவனின் இறுதித்தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் விதமாக வெளியான அமெரிக்க திரைப்படத்தைக் கண்டித்து, உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
பல போராட்டங்களுக்கு உரிய அனுமதி மறுப்பதுடன், அமெரிக்க தூதரகங்களை நெருங்கவிட மறுக்கிறது, இந்திய அரசு. எனவே "குதாயீ மதத்கார்" என்ற பட்டதாரி வாலிபர்களின் அமைப்பு புதிய யுக்தியை கையாண்டு "டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக நுழைவு வாயில் வரை" நேரடியாக தனது போராட்டத்தை எடுத்து சென்றது.

கேரள போலீசின் இரட்டை நிலை : பொங்கியது முஸ்லிம்களின் கோப அலை!


மீலாது (நபிகள் நாயகம் பிறந்த நாள்) ஊர்வலத்தில் "ராணுவ உடை" அணிந்து சென்ற முஸ்லிம்கள் மீது "தேச துரோக வழக்கு" தொடர்ந்த கேரள போலீஸ்,
தற்போது கிருஸ்தவர்கள் ஊர்வலத்தில், ராணுவ உடை அணிந்து சென்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறது. கேரள போலீசின் இந்த பாரபட்சமான செய்தியாவது, இந்த வருட துவக்கத்தில் காசர்கோடு மாவட்டம் கஞ்சன்காடு "ஜும்ஆ மசூதி கமிட்டி"யின் சார்பில் மீலாது ஊர்வலம் நடந்தது.

அதில் கலந்துக்கொண்ட ஜுனைத், அர்ஷத், ஆரிப் ஆகிய மூன்று இளைஞர்கள், ராணுவ உடை அணிந்து மிடுக்கான வகையில் சென்றனர். ராணுவ உடை அணிந்து செல்வது "தேச துரோக குற்றம்" என பா.ஜ.க. இளைஞர் அணித்தலைவர் சுரேந்திரன் கொக்கரித்தார். மீடியாக்களும் இதை ஊதிப்பெரிதாக்கின.

Wednesday, September 19, 2012

மமதா அதிரடி... பிரதமர், அமைச்சர்களுடன் சோனியா இன்று அவசர ஆலோசனை

 Sonia Meet Top Leaders Discuss Mamata Banerjee Withdraw
டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகுவதாகவும், ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெறுவதாகவும், அமைச்சர்களை விலக்கிக் கொள்வதாகவும் மமதா பானர்ஜி அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சிறுபான்மை அரசாக மாறியுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள், பிரதமர் உள்ளிட்டோருடன் தலைவர் சோனியா காந்தி இன்று அவசர ஆலோசனை நடத்தவுள்ளார்.
நேற்று இரவு தனது அதிரடி முடிவை அறிவித்தார் மமதா பானர்ஜி. இதனால் காங்கிரஸ் தரப்பில் பெரிய அளவில் அதிர்ச்சி இல்லை என்ற போதிலும் கூட நெருக்கடியான நிலையில் ஆட்சி இருப்பதால் கட்சித் தலைவர் சோனியா காந்தி இன்று காலை 10 மணிக்கு அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டியுள்ளார். சோனியா காந்தியின் வீட்டில் நடைபெறும் இக்கூட்டத்தி்ல பிரதமர் மன்மோகன் சிங், ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். அகமது படேலும் கலந்து கொள்கிறார். இக்கூட்டத்தில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து பரிசீலிக்கப்படவுள்ளது.

Monday, September 17, 2012

அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் "நாளை" அமெரிக்க தூதரக முற்றுகை போராட்டம்! : TNTJ பங்கேற்காது!

சென்னை:  முஹம்மது நபி அவர்களை இழிவுபடுத்தும் வகையில் சினிமாவை இயற்றிய யூதனை கண்டித்தும் அதற்கு துணை நிற்கும் உலக ரவுடி நாடான அமெரிக்காவை கண்டித்தும் நாளை மாலை 4 மணியளவில், அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளது.
உலக முஸ்லிம்கள் அனைவரையும் உலுக்கி கொதித்தெழ வைக்கும் வகையில் அமெரிக்க யூதன் பாசிலி,  முஹம்மது நபி அவர்களை இழிவுபடுத்தும் விதத்தில் திரைப்படம் தயாரித்துள்ளான். இதனை கண்டிக்க வேண்டுமென அமெரிக்க அரசிடம் கூறினால், அது அவரவர் தனிப்பட்ட கருத்து என முஸ்லிம் விரோத போக்கை கையாண்டுள்ளது. உலகின் பல பாகங்களிலும் அமெரிக்காவிற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளது. தமிழகத்திலும் அனைத்து இயக்கங்கள் சார்பில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. தற்போது முஸ்லிம் சமூகம் தங்களுடைய பலத்தை தெரிவிக்கும் வகையில் அனைத்து இயக்கங்களையும் ஒன்றினைத்து மாபெரும் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.  நாளை மாலை 4 மணியளவில் சென்னை இராயப்பேட்டை புதுக்கல்லூரியிலிருந்து புறப்பட்டு அமெரிக்க தூதரகம் நோக்கி முற்றுகை போராட்டம் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.
இதில் கீழ் கண்ட் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கெடுக்கவுள்ளன:

Saturday, September 15, 2012

சதாம் ஹுசைனை போன்ற தோற்றம் கொண்ட "முஹம்மத் பிஷர்" கடத்தல்!


மிஸ்ர் நாட்டை சேர்ந்த முஹம்மத் பிஷர் என்பவர், தோற்றத்தில் அச்சு அசலாக முன்னாள் ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் போன்று இருக்கிறார்.
இவரை தொடர்பு கொண்ட சிலர், சதாம் ஹுசைன் குறித்த திரைப்படம் தயாரிக்கவிருப்பதாகவும், அதில் நீங்கள் நடிக்க வேண்டும் எனவும் ஒப்பந்தம் போட்டனர். இதற்காக 3,33,000 டாலர்கள் ஊதியம் பேசப்பட்டது. மார்க்க பற்று நிறைந்த "முஹம்மத் பிஷர்" நல்லெண்ண அடிப்படையில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால், படப்பிடிப்பு நெருங்கும் வேளையில் சதிகாரர்களின் சூழ்ச்சியை புரிந்துக்கொள்ள முடிந்தது.

சதாம் ஹுசைனை கேவலப்படுத்தும் நோக்கில், அவரை சம்மந்தப்படுத்தி ஆபாசக்காட்சிகளை தயாரிக்க முற்பட்டனர். இதை கடுமையாக ஆட்சேபித்த முஹம்மத் பிஷரை, கடந்த வார இறுதியில் "இஸ்கந்திரிய்யா" என்ற இடத்தில் வைத்து, "கருப்பு உடைகளில் வந்த மூன்று நபர்கள்" ஒரு வேனில் கடத்தி சென்று அடித்து உதைத்தனர்.

Wednesday, September 12, 2012

கர்நாடகா : குர்-ஆன் ஓதி முடித்த "அன்ன பூரணி"


ஹுப்ளி, பஞ்சாரா தெருவை சேர்ந்த சுரேஷ்-ராஜேஸ்வரி தம்பதியினரின் மகள் அன்னபூரணி, திருமறை குர்-ஆன் முழுவதையும், அதன் மூல மொழியான அரபியில் ஓதி முடித்துள்ளார்.
ஹுப்ளி "விமன்ஸ் பாலிடெக் கல்லூரி"யில் படித்து வரும் அன்னபூரணிக்கு, சிறு வயது முதல், தானும் முஸ்லிம் குழந்தைகளைப்போல குர்-ஆன் ஓத வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு, அதை தனது தாயிடம் கூறியுள்ளார். அதை தொடர்ந்து, அன்னபூரணி குடும்பத்தினர் "காசின் பாஷா-குல்ஜார் பானு தம்பதி"களை அணுகியுள்ளனர்.

அவர்களது ஏற்பாட்டின் பேரில், பள்ளிவாசல் இமாமின் மனைவி பீபிஜான், அன்னபூரணிக்கு குர்-ஆன் (பார்த்து) ஓத பயிற்சி கொடுத்து வந்தார். கல்லூரி படிப்புக்கிடையிலும், தினமும் பிற முஸ்லிம் குழந்தைகளுடன் சேர்ந்து, குர்-ஆன் ஓதிவந்த அன்ன பூரணிக்கு, குர்-ஆன் முழுமையாக ஓதி முடிக்க, 4 ஆண்டுகளானது.

பள்ளி மாணவனை கடத்த முயன்ற "ATS" போலீசுக்கு அடி-உதை!


டெல்லி ஜாமியா நகர் "ஷாஹீன் பாக்" பகுதியில், 16 வயது பள்ளி மாணவனை கடத்த முயன்ற, மும்பை "ATS" படையை சேர்ந்த போலீசாரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.
நேற்று (11/09) மாலை 6.30 மணியளவில் ஒரு வீட்டின் எதிரில், சப் இன்ஸ்பெக்டர்கள் ஆனந்த் மற்றும் விக்ரம் தலைமையில் "சாதாரண உடை"யில் இருந்த 7 பேர் கொண்ட ATS போலீசார் மறைந்து நின்றுக்கொண்டு, அந்த வீட்டை கண்காணித்தனர். அப்போது, டியூஷன் படிக்க செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்த 11ம் வகுப்பு பள்ளி மாணவன், ஹசன் அஹ்மத் (16) என்ற சிறுவனை வலுக்கட்டயாமாக காரில் கடத்த முயன்றனர்.

Sunday, September 9, 2012

முஸ்லிம்களை சீண்டி பார்க்கும் பால் தாக்கரே!


எனக்கு கோபம் வந்து விட்டால், முஸ்லிம்களை மகாராஷ்டிரம் உட்பட இந்தியாவில் எங்கும் விட்டு வைக்க மாட்டேன் என்று, 86 வயது கிழட்டு ரவுடி பால்தாக்கரே, தனது துவேஷ பேச்சுக்களால் முஸ்லிம்களை சூடேற்றிப்பார்க்கிறார்.
நேற்று (08/09) மதியம் வெளவந்த சிவசேனை கட்சியின் "சாம்னா" பத்திரிக்கைக்கு, அவர் அளித்த பேட்டி : முஸ்லிம்கள், முதன்முதலாக 1992ல் "பாபர் மசூதி" இடிப்புக்குப்பின்னர் வீதியில் இறங்கினர்.

உத்தரப்பிரதேசத்தில் இடிக்கப்பட்ட மசூதிக்காக மும்பை வீதிகளில் இறங்கியது ஏன்? என்று கேள்வி எழுப்பும் அவர்? அஸ்ஸாம் முஸ்லிம்களுக்காக "மும்பை ஆசாத் மைதானத்தில்"  நிகழ்த்திய வன்முறை, திட்டமிட்ட செயல் என்றார்.

போலீசால் பழி வாங்கப்படும் முஸ்லிம்கள் : ஆதாரங்களுடன் "டாக்குமென்ட்ரி" படம்!


டெல்லியை சேர்ந்த "பகர்தீப் சக்கரவர்த்தி" என்ற பிரபல "டாக்குமென்ட்ரி" பட இயக்குனர், தீவிரவாத குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகள் சிறை வாசத்துக்குப்பின் நிரபராதிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு
விடுதலை பெற்ற 7 முஸ்லிம் இளைஞர்களின் உண்மை வரலாற்றை "டாக்குமென்ட்ரி"  படமாக இயக்கியுள்ளார். இதற்கு, "மா பாத் ஹங்காமா" (பரபரப்புக்குப்பின்) என பெயர் சூட்டியுள்ளார். இதில் வரும் உண்மை கதாபாத்திரங்கள் : 1.முக்தார் அஹ்மத்.  2.முஹம்மத் பசீஹுத்தீன். 3.உமர் பாரூக். 4.முஹ்தஷிம். 5.ஹுரியத் அன்சாரி. 6.முஹம்மத் முசர்ரத் ஹுசைன். 7.ஷேக் அப்துல் கலீம்.  

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் 100வது ராக்கெட்

 Isro S 100th Mission Ready Take Off
திருப்பதி: இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவின் 100வது ராக்கெட் பயணம் இன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங், மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலையில், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது பி.எஸ்.எல்.வி - சி21 ராக்கெட்.
2 செயற்கைக் கோள்களுடன் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி21 ராக்கெட் சரியாக 9.51 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதையடுத்து பிரதமர் உள்ளிட்டோர் கைகளைத் தட்டி சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.
இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டா. இதை ரஷ்ய ராக்கெட் மூலம், 19-4-1975 அன்று விண்ணில் செலுத்தியது. ஆர்யபட்டாவின் மூலம் தனது விண்வெளி பயணத்தை துவங்கிய இஸ்ரோ இன்று காலை 9.51 மணிக்கு தனது 100வது ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தியது.

Thursday, September 6, 2012

மன்மோகன்சிங் மீதான விமர்சனம்: வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளரை சாடுகிறது பிரதமர் அலுவலகம்

 Pmo Replies Washington Post Slams Journalist
டெல்லி: பிரதமர் மன்மோகன்சிங்கை மிகக் கடுமையாக விமர்சித்து வாஷிங்டன் போஸ்ட்டில் கட்டுரை இடம்பெற்றிருப்பதற்கு பிரதமர் அலுவகம் விளக்கம் அளித்திருக்கிறது. மன்மோகன்சிங்கை விமர்சித்து ஒருதலைபட்சமாக கட்டுரை எழுதியதற்காக பத்திரிகையாளரையும் மிகக் கடுமையாக சாடியிருக்கிறது பிரதமர் அலுவலகம்.
இது தொடர்பாக கட்டுரை எழுதிய பத்திரிகையாளர் சைமனுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசாங்கத்தை விமர்சிக்கும் ஒரு பத்திரிகையாளரிடன் உரிமையை பற்றி நாங்கள் குறிப்பிடவில்லை. ஆனால் வரம்புமீறிய முறையற்ற உங்களது செயல்பாடுகளைத்தான் இக்கடிதத்தில் குறிப்பிடுகிறோம்.

Tuesday, September 4, 2012

ஆசிரியர்கள் தினம்!!!

கருவறையில் இருந்து வெளிவரும் ஒரு குழந்தைக்கு அந்த தாய் உலகை அடையாளம் காட்டுகிறாள். அந்த உலகை புரிந்து பண்பட்டவனாய் வாழும் கலையை ஆசிரியர் தான் அந்த குழந்தைக்கு செவ்வனே கற்று கொடுத்து மனிதனை மனிதனாக மாற்றும் வேலையை செய்கின்றனர். 

அந்த உண்ணதமான பணியை செய்யும் ஆசிரியர்களை நினைவுகூறும் விதமாகவும், நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதி சர்வபள்ளி திரு.ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். 

அவர் ஒரு சிறந்த ஆசிரியராக மட்டும் இல்லாமல் சிறந்த தத்துவமேதையாகவும், சிறந்த கல்வியாளராகவும் விளங்கினார். இந்தியாவில் 1962 முதல் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5ஆம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. 

Monday, September 3, 2012

பிரதமர் அலுவலகத்தை நினைத்தால் 'பி.பி' ஏறுகிறது- சுப்ரீம் கோர்ட் வரலாறு காணாத தாக்கு!

 Cauvery Water Dispute Supreme Court Slams Pm Office
டெல்லி: காவிரி நதிநீர் அலுவலக விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் அலுவலகம் செயல்படுவம் போக்கை நினைத்தாலே ரத்த கொதிப்புதான் வருது... என்று இதுவரை இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஒரு பிரதமர் அலுவலகம் பற்றி கடுமையான விமர்சனத்தை வைத்திருக்கிறது உச்சநீதிமன்றம்.
காவிரி நதிநீர் பிரச்சனை என்பது தமிழக மக்களின் வாழ்வாதார விவகாரம். தமிழகத்தில் பல்லாயிரம் ஏக்கரிலான குறுவை சாகுபடியே செய்ய முடியாமல் போய் சம்பா சாகுபடியும் நடக்குமா? என்ற கேள்விக்குறியோடு தமிழகம் தவித்துக் கொண்டிருக்கிறது. தமிழக அரசும் காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்டுங்கள் என்று மன்றாடிக் கொண்டிருக்கிறது.
ஆனால் காவிரி நதிநீர் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் அலுவலகம் எப்படியெல்லாம் அலட்சியமாக, தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனையில் எப்படியெல்லாம் படுகேவலமாக மெத்தனமாக நடந்து கொண்டிருக்கிறது என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று வெட்ட வெளிச்சமாக எச்சரிக்கையுடன் கூடிய கடுமையான வார்த்தைகளால் வறுத்தெடுத்துவிட்டனர்.

Sunday, September 2, 2012

மஹ்மூத் அப்பாஸை கொலை செய்ய இஸ்ரேல் அமைச்சர் உத்தரவு! : பாலஸ்தீனத்தில் பதற்றம்!


ஈரானில் நடைபெற்ற அணி சேரா நாடுகள் இயக்கத்தின் "NAM" (Non Aligned Movement) மாநாட்டில் கலந்துக்கொண்ட பாலஸ்தீன ஆணையத்தலைவர் மஹ்மூத் அப்பாஸை கொலை செய்ய வேண்டும்,
என்று இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் "அவிக்டோர் லைபெர்மன்" ஆவேசமாக கூறியுள்ளார். நேற்று (01/09) இஸ்ரேலின் தொலைகாட்சி "சேனல்10" க்கு அவர் அளித்த பேட்டி : ஈரானில் நடைபெற்ற அணிசேரா இயக்கத்தின் "NAM" மாநாட்டில் பாலஸ்தீன தலைவர் "மஹ்மூத் அப்பாஸ்" கலந்துக்கொண்டது "இஸ்ரேல் வரலாற்றின் கருப்பு தினமாகும்". அவர், பாலஸ்தீனத்தின் "ரமல்ல அத்தாரிட்டி"யை சட்ட விரோதமானது என கூறியதற்கு பதிலடியாக, அவர் மாநாட்டிலிருந்து திரும்பி வரும்போதே அவரை வழிமறித்து "கொலை செய்திட வேண்டும்" என்று, வன்முறையை தூண்டும் வகையில் பேசினார்.

கோத்னானியை காப்பாற்ற முயன்றது மோடி அரசு-நரோடா பாட்டியா வழக்கை விசாரித்த நீதிபதி

 Patia Judge Hinted At Narendra Modi Govt Bid To Shield
அகமதாபாத்: நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பாஜக அமைச்சர் மாயா கோத்னானியை காப்பாற்ற முதல்வர் நரேந்திர மோடியின் அரசு தீவிரமாக முயன்றது என்று இந்த வழக்கில் மாயாவுக்கு 28 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி ஜோத்சனா யாக்னிக் தெரிவித்துள்ளார். இதனால் மோடிக்கு புது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்திற்குப் பின்னர் சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிராக பெரும் இனக் கலவரம் ஏற்பட்டது. பஜ்ரங் தளம், விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் நடத்திய இந்த இனவெறிப் படுகொலை வன்முறையில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
அதில் நரோடா பாட்டியா பகுதியில்தான் மிகப் பெரிய அளவில் அதிக அளவிலானோர் படுகொலை செய்யப்பட்டனர். மொத்தம் 97 இஸ்லாமியர்கள் இங்கு நடந்த வன்முறையில் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 36 பேர் குழந்தைகள், 35 பேர் பெண்கள் ஆவர்.

Saturday, September 1, 2012

அஸ்ஸாமை தொடர்ந்து மணிப்பூர் : வங்கத்தின் பெயரால் வதைக்கப்படும் முஸ்லிம்கள்!


வெள்ளையர் ஆட்சிக்காலத்தில், வங்கத்திலிருந்து அழைத்து வரப்பட்ட முஸ்லிம்களை அந்நியப்படுத்தும் அக்கிரமம், இப்போது அஸ்ஸாமை கடந்து மணிப்பூர் மற்றும் நாகலாந்திலும் தலை விரித்தாடுகிறது.
ஆனால், இந்த 2012லும் நேபாள நாட்டிலிருந்து இந்தியாவுக்குள் வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நேபாள நாட்டு பெண்கள் "விபச்சாரத்தொழிலுக்காகவே, அதிகளவில் அழைத்து வரப்படுகின்றனர். முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக, அஸ்ஸாமை தொடர்ந்து இப்போது மனிப்பூரின் "இம்பால்" மற்றும் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் "லைலாங்" மாவட்டத்திலும், முஸ்லிம்களை போலீஸ் அச்சுறுத்தி வருகிறது.

இஞ்சீனியர் - டாக்டர் என குறி வைத்து கைது செய்யும் காவல் துறை : கலக்கத்தில் முஸ்லிம் சமூகம்!


தீவிரவாத தொடர்பு என்ற பொய்யான குற்றச்சாட்டுக்களின் பெயரில், 11 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து, மீண்டும் தனது முஸ்லிம் வேட்டையை துவக்கியுள்ளது கர்நாடகா பா.ஜ.க அரசு.
இதில் பிரபல பத்திரிகையான "டெக்கான் ஹெரால்டில்" பணியாற்றும் பத்திரிகையாளர் மற்றும் டி.ஆர்.டி.ஒ, விஞ்சானி,  இஞ்சீனியர் மற்றும் டாக்டர் ஆகியோரும் அடங்குவர்.  இதுவரை பல்லாயிரம் முஸ்லிம் இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்த (சில) காவல் துறை கயவர்களால் ஒருவர் மீது கூட குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை.

ராஜ்தாக்கரே ஒன்றும் மும்பையின் பூர்வகுடி அல்ல.. பீகாரிலிருந்து குடியேறியவர்தான்..

டெல்லி: மகாராஷ்டிர மாநிலம் மராட்டியர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று அவ்வப்போது கூச்சல் போட்டு வன்முறையைத் தூண்டும் மராட்டிய நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே இப்பொழுது வசமாக சிக்கிக் கொண்டிருக்கிறார்.
மும்பையில் அண்மையில் ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக பீகாரைச் சேர்ந்த ஒருவரை மும்பை போலீசார் கைது செய்தனர். இதற்கு பீகார் தலைமைச் செயலர் எதிர்ப்புத் தெரிவித்து மும்பை காவல்துறை ஆணையருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருந்த ராஜ்தாக்கரே, பீகாரிகளை ஊடுருவல்காரர்கள் என்றும் வந்தேறிகள் என்றும் கூறியிருந்தார்.

Thursday, August 30, 2012

அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனை அறிவிப்பு : குஜராத் குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிக்கப்படவில்லை!

மும்பை தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்த்து கசாப் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

அஜ்மல் கசாப்புக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை சரிதான், என்று கூறி அதனை உறுதி செய்ததோடு, தூக்குத் தண்டனையை எதிர்த்து கசாப் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

உலக அளவில் வளரும் நாடுகளின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்: அணிசேரா நாடுகளின் மாநாட்டில் மன்மோகன்சிங்

 Voice Developing Nations Should Increase
டெஹ்ரான்: வளர்ந்து வரும் நாடுகளின் குரல் உலகளவில் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்று அணிசேரா நாடுகளின் மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தியுள்ளார்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இன்று தொடங்கிய அணிசேரா நாடுகளின் மாநாட்டில் மன்மோகன்சிங் பேசியதாவது:
அணிசேரா நாடுகளின் தலைமைப் பொறுப்பை ஏற்க இருக்கும் ஈரானுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும். உலகத்தில் அமைதி, பொருளாதார நிலை, பாதுகாப்புத் தன்மை, மேம்பாடு என அனைத்திலும் அணிசேரா நாடுகளின் முக்கியத்தும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாறிவரும் உலகச் சூழலில் அணிசேரா நாடுகள் அமைப்பின் தேவை அவசியமானதாக இருக்கிறது. மேற்கு ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் வரவேற்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா ஆதரிக்கிறது. இப்படியான மாற்றங்களில் அன்னிய சக்திகளின் தலையீடு இருக்கக் கூடாது.

Tuesday, August 28, 2012

செவ்வாய் கிரகத்திலிருந்து மனிதக் குரலை அனுப்பிய கியூரியாசிட்டி

 Mars Rover Sends Back Human Voice Recording
பஸடேனா (கலிபோர்னியா): செவ்வாய் கிரகத்தில் முதல் மனிதக் குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது. பூமியிலிருந்து பதிவு செய்து அனுப்பப்பட்ட இந்தக் குரல், செவ்வாய்கிரகத்திலிருந்து நாசாவுக்குத் திரும்பியுள்ளது.
இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் மனிதனின் முதல் சுவடு குரல் மூலம் பதிவாகியுள்ளது.
க்யூரியாசிட்டி தனது டெலிபோட்டோ கேமிராவில் எடுத்து அனுப்பியுள்ள புதிய படத்துடன் இந்த குரலையும் நாசா வெளியிட்டுள்ளது.

ஏசி காரில் தூக்கம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்?


ஏசி காரில் நீண்ட நேரம் தூங்கும்போது கேபினுக்குள் கார்பன் மோனாக்சைடு வாயு பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்த வாயு உயிருக்கு ஆபத்தை விளைக்கும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு மட்டுமே காரை பயன்படுத்துவதில்லை. சிலருக்கு பொழுதுபோக்கு இடம். சிலருக்கு மனதையும், உடலையும் ரிலாக்ஸ் செய்யும் இடமாக பயன்படுகிறது.
இன்னும் சிலர் அலுவலக இடைவேளையில் காருக்குள் ஏசியை ஆன்செய்துவிட்டு ஒரு தூக்கம் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், நீண்ட தூரம் செல்லும்போது களைப்பை போக்கிக் கொள்ள காரை ஓரங்கட்டிவிட்டு ஒரு தூக்கத்தை போட்டு விட்டு செல்வோரும் இருக்கின்றனர்.

Sunday, August 26, 2012

1992ல் "பாபரி மஸ்ஜித்" இடிக்கப்பட்டது!...... 2012 ல் "அக்பரி மஸ்ஜித்" இடிக்கப்படுகிறது!!

உயர்ஜாதி இந்துக்குக்களால் 1992ல் அயோத்தியில் "பாபரி பள்ளிவாசல்" இடிக்கப்பட்டதென்றால்,  2012ல் டெல்லியில் உள்ள "அக்பரி பள்ளிவாசலை" இடித்து தரைமட்டமாக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மசூதி இடிக்கப்பட்டால் சட்டம் ஒழுங்கு நிலை சீர்கெடும் என்று போலீஸ் எடுத்துக்கூறியும், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் சஞ்சய்கிஷன் மற்றும் ராஜீவ் "எதை பற்றியும் தங்களுக்கு கவலை இல்லை, எப்பாடு பட்டாகிலும் சட்டம் நிலை நாட்டப்படவேண்டும்" என்று உத்தரவிட்டனர்.  இது பற்றிய விரிவான செய்தியாவது: 

டெல்லியில் "மெட்ரோ ரயில்" பணிகளுக்காக பல இடங்களில் பூமிக்கடியில் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தபோது, டெல்லி செங்கோட்டை (லால் கிலா) அருகில் பூமிக்கடியில் புதையுண்டு - சிதிலமடைந்து இருந்த முழுமையான பள்ளிவாசல் கட்டிட இடிபாடுகள் கண்டெடுக்கப்பட்டன. 

போலீசாரின் தடியடி, கண்ணீர்புகை குண்டு வீச்சால் டெல்லி வீதிகளில் சிதறி ஓடிய அன்னா ஹசாரே கோஷ்டி

 Arvind Kejriwal Defiant Calls Both Congress Bjp Threats டெல்லி: நிலக்கரி சுரங்க ஊழல் ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் பாஜக தலைவர் நிதின் கத்காரி ஆகியோரது வீடுகளை டெல்லியில் முற்றுகையிட முயன்ற அன்னா ஹசாரே குழுவினர் மீது போலீசார் தடியடி நடத்தி , கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டியடித்தனர்.
டெல்லியில் இன்று காலை பிரதமர் மன்மோகன்சிங்கை கெஜிர்வால் தலைமையில் ஒரு குழுவினரும் சோனியா வீட்டை மனிஷ் சிஷோடியா,விஸ்வாஸ் தலைமையிலான குழுவினரும் பாஜக தலைவர் நிதின் கத்காரிவீட்டை சஞ்சய்சிங் தலைமையிலான குழுவினரும் முற்றுகையிட ஒன்று திரண்டனர். டெல்லியில் ஏற்கெனவே உஷாராக இருந்த போலீசார் அன்னா குழுவைச் சேர்ந்த அனைவரையும் கூண்டோடு தடுத்து வைத்து அப்புறப்படுத்தினர். அனைவரும் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.

Saturday, August 25, 2012

மு.க.ஸ்டாலின்,திருமாவளவன் உட்பட அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் கலந்து கொண்ட பிரமாண்ட பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கமாக எஸ்.டி.பி.ஐ கட்சி இருந்து வருவது பாராட்டுக்குரியது என்று தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின்(எஸ்.டி.பி.ஐ) சார்பாக நேற்றைய தினம் இரவு சென்னை பெரியார் திடலில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் எஸ்.எம்.ரஃபீக் அஹ்மத், துணைத் தலைவர் ஏ.பிலால் ஹாஜியார், செயலாளர்கள் கே.செய்யது இப்ராஹீம், ஜி.அப்துல் ஸத்தார், வி.எம்.அபூதாஹிர், ஏ.செய்யது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

பாப்புலர் ப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் முஹமது யூசுப் காவல் துறை அதிகாரிகள் மீது தொடுத்த வழக்கில் நீதிமன்றம் பிறபித்த உத்தரவு

Friday, August 24, 2012

ஃபாசிஸ்டுகளின் நவீன ஆயுதம்: ஸைபர் தாக்குதல்!

ஒரு சமூகத்தில் நன்றியறிதல்களும்,பரஸ்பர பாராட்டுகளும் குறைந்து கண்டன குரல்கள் பெருகினால் அது நிம்மதி இழந்த சமூகமாக மாறிவிடும். 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அப்படி ஒரு சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றால் அது கண்டிப்பாக சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்களை தான் சாரும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை. 

சமீபத்தில் ஒரு சில விஷமிகளால் பரப்பப்பட்ட வதந்தி இந்தியாவையே உலுக்கியது.தென் மாநிலங்களில் வாழும் வட மாநிலத்தவர்களுக்கு முஸ்லிம்களால் ஆபத்து என்றும் அதற்கு சில பதிவுகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் ஆதாரமாக வைத்து சமூக வளைதளங்கள் மூலமாகவும், குறுஞ்செய்திகள் மூலமும், இன்டர்நெட் வழியாகவும் பரப்பிய செய்திகளால் வட மாநில மக்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்கே இடம்பெயர்ந்த காட்சி பத்திரிக்கை வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் பார்த்த எல்லோருடைய மனதிலும் இயல்பாகவே ஒரு கேள்வி எழுப்பியது இது ஜனநாயக நாடுதான? இது மத சார்பற்ற நாடுதான? 

Wednesday, August 22, 2012

அசாஞ்சேவுக்கு ஆதரவு: இங்கிலாந்தில் அரசு இணையத்தளங்கள் முடக்கம்


விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச் மீதான நடவடிக்கைகளை எதிர்க்கும் விதமாக இங்கிலாந்து அரசின் இணையத்தளங்களை மர்ம நபர்கள் முடக்கிப் போட்டுள்ளனர்.
விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச். அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அரசு ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியவர்.
அமெரிக்க அரசு அவர் மீது கடும் கோபத்துடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிலையில் சுவீடன் நாட்டில் 2 பெண்களை பலாத்காரம் செய்ததாக அசாஞ்ச் மீது வழக்கு தொடரப்பட்டது.

Tuesday, August 21, 2012

பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றது செல்லாது- உச்சநீதிமன்றத்தில் பி.ஏ.சங்மா வழக்கு

 Sangma Moves Sc Against Pranab S Election As President
டெல்லி: நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வலியுறுத்தி அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பி.ஏ.சங்மா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சார்பில் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்பட்டார். பாஜக, அதிமுக, பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பி.ஏ.சங்மா போட்டியிட்டார். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுக்களின் பரிசீலனையின் போதே பி.ஏ.சங்மா இத்தகைய ஆட்சேபத்தை தெரிவித்திருந்தார். இதையடுத்து வேட்புமனு பரிசீலனை ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டது.

Friday, August 17, 2012

ரூ.24,000 கோடி நிலத்தை ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.100க்கு குத்தகைக்கு தந்த மத்திய அரசு

 Cag Slams Development Fee Concessional Land Delhi
டெல்லி: ரூ. 24,000 கோடி மதிப்புள்ள நிலத்தை ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ. 100க்கு குத்தகைக்குக் கொடுத்துள்ளது மத்திய அரசு. இதன்மூலம் நாட்டுக்கு ரூ. 24,000 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய கணக்குத் தணிக்கை அமைப்பான சிஏஜி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பான சிஏஜியின் அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்து. அதில், டெல்லியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு 239 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ. 24,000 கோடியாகும். ஆனால், அதை ஆண்டுக்கு ரூ. 100க்கு குத்தகைக்குத் தந்துள்ளனர்.

2ஜி ஊழலை விஞ்சிய நிலக்கரி சுரங்க ஊழல்: அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு: சிஏஜி குற்றச்சாட்டு

 Coal Block Allotments Cag Final Report Puts Loss
டெல்லி: கடந்த 2004-2009ம் ஆண்டில் நாட்டின் 57 நிலக்கரி சுரங்கங்களை ஏலமே விடாமல் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கியதில் தேசத்துக்கு ரூ. 1.86 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கைத் துறை (Comptroller and Auditor-General- CAG) குற்றம் சாட்டியுள்ளது.
இது தொலைத் தொடர்புத்துறையில் நடந்த  ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ஏற்பட்ட ரூ. 1.76 லட்சம் கோடியை விட அதிகமாகும்.

Thursday, August 16, 2012

ராஜஸ்தான் : முஸ்லிம்களின் மீது "பஜ்ரங் தள்" தாக்குதல் -ஊரடங்கு உத்தரவு!


ராஜஸ்தானின் சரோஹி மாவட்டம் "கிருஷன் கஞ்" பகுதியில் நேற்று பள்ளிக்கூடம் ஒன்றில் தேசியக்கொடி ஏற்றிய பிறகு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
காலை 11.30 மணி அளவில் "கால்பந்து" விளையாட்டின் போது பந்து ஒருவரின் மீது பட்டது தொடர்பாக வாக்குவாதம் நடந்தது. அதை தொடர்ந்து "பஜ்ரங் தள்" அமைப்பின் கன்வீனர் "இந்தர் சிங்" தலைமையில் 500 பேர் கொண்ட கும்பல், பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் முஸ்லிம்களின் வீடுகளை குறிவைத்து தாக்க தொடங்கியது.  இதில் ஒரு வீடு முற்றாக சேதப்படுத்தப்பட்டது.

அமெரிக்க கடற்பகுதிக்குள் ரகசியமாக ஊடுருவி விட்டு திரும்பி வந்த ரஷ்ய நீர்மூழ்கி!

 Russian Attack Submarine Slipped Pa வாஷிங்டன்: ரஷ்யாவின் அணு சக்தியால் நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்க கடற்படையின் அனைத்துக் கண்காணிப்புகளையும் மீறி அமெரிக்க கடற்பகுதியில் ஊடுருவி பல நாட்கள் உளவு பார்த்துவிட்டு திரும்பிச் சென்றுள்ளது.

ஏராளமான ஏவுகணைகளோடு அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் உலா வந்த இந்த நீர்மூழ்கிக் கப்பல் அகுலா ரகத்தைச் சேர்ந்த தாக்குதல் கப்பலாகும்.

சுதந்திரதின வாழ்த்துச் செய்தி

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் மக்களுக்கு 65வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

அவர் தன்னுடைய சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் " நாட்டின் நிலவி வரும் பொருளாதார ஸ்திரத் தன்மையற்ற சூழல், விலைவாசி உயர்வால் கேள்விக்குறியாகிப்போன மக்களின் அன்றாட வாழ்க்கை, பொருளாதாரம் ஒரு சிலர்டிஅம் மட்டுமே தேங்குதல், கார்ப்பரேட் கம்பெனிகளின் முறைகேடான அதீத வளர்ச்சி, பழங்குடி, ஆதிவாசிகளின் வாழ்வாதாரங்கள்  சுரண்டல், நாட்டில் சிறுபான்மைச் சமூகங்களுக்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நடத்தப்படும் அரச பயங்கரவாதம், வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்று வரும் இனமோதல், ஃபாசிஸ சக்திகளின் சதி என சுதந்திர இந்தியா தன்னுடைய சுதந்திர அடையாளத்தை இழக்கச் செய்வதற்கான முயற்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதைப் போன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நாடு இன்று உள்ளது.

Tuesday, August 14, 2012

சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்களின் அறிக்கை

Freedom parade
சுதந்திர தினத்தை கௌவுரவிக்கும் விதமாக தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட, ரத்தம் சிந்திய தியாகிகளை போற்றும் விதமாகவும் பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்கும் விதமாகவும், போராடிப் பெற்றசுதந்திரத்தை பாதுகாக்க அனைத்துத் தரப்பு மக்களும் உறதிமொழி ஏற்கும் விதமாகவும், சுதந்திரப் போராட்ட நினைவலைகளை மக்கள் மனதில் பூத்துக்குலுங்கச் செய்யும் விதமாக தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தோம்.

அதன் ஒரு பகுதியாக கடந்த 2007 முதல் 2010 வரை மதுரை, கும்பகோணம் மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்தி வந்தோம். 2011 ஆகஸ்ட்ல் நெல்லையில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த தீர்மானித்திருந்தோம். ஆனால் சிறுபான்மை விரோதப் போக்குடன் செயல்பட்ட காவல்துறை நீதிமன்றத்தை அணுகக்கூட எங்களுக்கு வாய்ப்பு கிடைத்து விடாத அளவிற்கு கடைசி நேரத்தில் அனுமதியை ரத்து செய்தது.

ராம்தேவின் வருமான வரி மோசடிகள்.. நடவடிக்கைக்கு தயாராகும் மத்திய அரசு!

 Govt May Slap Tax Evasion Charges On Hostile Yoga Guru
டெல்லி: பாஜகவுடன் கைகோர்த்துக் கொண்டு நெருக்கடி கொடுத்து வரும் பாபா ராம்தேவுக்கு எதிராக வருமான வரித்துறையை களமிறக்கவுள்ளது மத்திய அரசு.
ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது தான், டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்திய ராம்தேவின் கூட்டத்தில் நள்ளிரவில் போலீசார் நுழைந்து லத்தியை சுழற்றி கூட்டத்தை கலைந்து ஓடச் செய்தனர்.
இந் நிலையில் கொஞ்ச காலம் சும்மா இருந்த ராம்தேவ், இப்போது அன்னா ஹசாரே தனது அமைப்பைக் கலைத்துவிட்டு இடத்தைக் காலி செய்ததும் அந்த இடத்தை முழுவதுமாக பிடிக்க முயன்று வருகிறார். முதலில் உண்ணாவிரதம் என்று கூறிவிட்டு திடீரென நாடாளுமன்றம் நோக்கி பேரணி என்று கூறிக் கொண்டு நேற்று டெல்லியையே அல்லோலப்படுத்தினார் ராம்தேவ்.

இதுதான் கடைசி அவகாசம்: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ.தரப்புக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை


 Sc Notice Sasikala On Dmk Leader Plea
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தொடர்ந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பு பதிலளிக்கும் வகையில் 3 வாரங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த வழக்கின் விசாரணையை எப்படி இழுத்தடிக்க முடியுமோ அப்படி ஜெயலலிதா தரப்பு இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.

Friday, August 10, 2012

புனே குண்டு வெடிப்பு : தயானந்த் பாட்டீலை முஸ்லிமாக சித்தரிக்க முயல்கிறது என்.ஐ.ஏ.


புனே நகரில் 10 நாட்களுக்கு முன் நடந்த குண்டுவெடிப்பில், சந்தேகத்திற்கிடமாக காயமடைந்த "தயானந்த்  பாட்டில்" குறித்து விசாரித்து வரும் தேசிய புலனாய்வுக்குழு (NIA),
குண்டுவெடிப்பின் காரணங்களையும் குற்ற செயலில் ஈடுபட்டவர்களை குறித்தும் ஆய்வுகளை மேற்கொள்வதை விட்டுவிட்டு, தயானந்த் பாட்டில் முஸ்லிமாக இருப்பாரோ? என்ற ஒரே கோணத்தில் விசாரித்து வருகிறது.

ராம்தேவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் வெகு ஜோராக 24 மணி நேரமும் உணவு விநியோகம்

 Ramdev Goes Out Followers At Ramlila Maidan
டெல்லி: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவினரின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மக்களிடம் ஆதரவு கிடைக்காமல் போனநிலையில் டெல்லியில் 3 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வரும் யோகா குரு ராம்தேவ், "ஸ்கெட்ச்" போட்டு வெற்றிகரமாக கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார்.
கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும், வலுவான லோக்பால் மசோதா தேவை என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராம்தேவ் டெல்லி ராம்லீலா மைதானத்தில் 3 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

Thursday, August 9, 2012

அமெரிக்காவில் தொடரும் தாக்குதல் : நேற்று சீக்கியர் குருத்வாரா; இன்று மசூதி தீக்கிரை!


அமெரிக்காவில் சீக்கியர்கள் கோவிலில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் நேற்று முன்தினம் (06/08) ஆறு பேர் பலியான அதிர்ச்சியிலிருந்து மீள்வவதற்குள்,
நேற்று (07/08)  "மசூதி" ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது (படத்தில் பார்ப்பது : மசூதியின் எழில் நிறைந்த தோற்றமும் - தீக்கிரையான பின்புள்ள காட்சியும்) மசூதி எரிக்கப்பட்ட சம்பவத்துக்கு "Concil on American Islamic Relations" (CAIR) கடும் கண்டனத்தை தெரிவித்திருப்பதோடு, நள்ளிரவில் மசூதி மீது நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு காரணமானவர்களை அடையாளம் காட்டுவோருக்கு 10,000 டாலர் பரிசுத்தொகையும் அறிவித்துள்ளது.

பதவி உயர்வுகளிலும் தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு-சட்டம் வருகிறது

 Reservation Promotion Bill Be Brought In Parliament
டெல்லி: அரசுப் பதவிகளில் இருக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு பதவி உயர்வுகளிலும் இட ஒதுக்கீடு தரும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது.
இத் தகவலை மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
இன்று காலை ராஜ்யசபா கூடியதும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி எழுந்து, கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே தலித்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தருவதாக மத்திய அரசு உறுதிமொழி தந்தது. இது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்தக் கூட்டத்தையே மத்திய அரசு கூட்டவில்லை.

Tuesday, August 7, 2012

இஸ்லாத்தை ஏற்ற 17 "ஒலிம்பிக்" வீரர்கள்!


லண்டனில் நடை பெற்று வரும் "ஒலிம்பிக்" போட்டிகளில் உலகெங்கிலுமிருந்து பங்கெடுக்க  வந்திருக்கும் வீரர்-வீராங்கனைகளின் மத்தியில் "அப்துர்ரஹ்மான் கிரீன்" அவர்களின் தலைமையில் லண்டனில் செயல்படும் "Islamic Education and Research Academy" (IERA) சார்பில் "வாழ்வியல் நெறிமுறைகள்" குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.