Thursday, August 18, 2011

மேலப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திமுடித்தனர்.

மேலப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திமுடித்தனர்.


                                                                             In The Name Of Alllah Most Gracious Most Merciful




Popular Front of India Protest - Exclusive Gallery


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் A.S.இஸ்மாயில்
மேலப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திமுடித்தனர். இந்த ஆர்பாத்தில் சுமார் 2000 துக்கு அதிகமாக ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். இந்த ஆர்பாட்டத்தின் மூலம் மேலப்பாளையம் சந்தை முக்கு பெரிய மாநாடு நடைபெறுவதை போல காட்சியளித்தது.

SDPI மாநிலத்தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாக்கவி
நம் நாட்டில் சுதந்திர போராட்டத்தின் தொடக்கமான 1857 சிப்பாய் கலகம் நடைபெற காரணமாக அமைந்தது தொடங்கி, கப்பலோட்டிய தமிழனுக்கு கப்பல் வாங்குவதற்கு பொருளாதார ரீதியாக உதவி செய்தது, தனது இரண்டு மகன்களின் தலைகள் துண்டிக்கப்பட்ட போதும் இந்தியாவிற்கான சுதந்திரத்தை வென்றெடுக்கும் போராட்டத்தில் சற்றும் பின்வாங்காத மாமனனர் பகதூர்ஷாவின் தியாகம் என சுதந்திர போராட்ட வரலாற்றுச் சுவடுகளின் எல்லா பக்கங்களிலும் நீங்கா இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு, இன்று பெற்ற சுதந்திரத்தை கொண்டாடுவதற்க்கும், சுதந்திர போராளிகளின் தியாகங்களை நினைவு கூறுவதற்கும் அனுமதி கிடையாது என்பது நமது காவல்துறை மற்றும் தமிழக அரசின் முஸ்லிம் விரோத போக்கை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாநிலத்துணை தலைவி A. பாத்திமா ஆலிமா

விடுதலை சிறுத்தை கட்சியின் நெல்லை மாவட்ட செயாலாளர் M.C.கார்த்திக்


மாவட்ட தலைவர் எம்.அன்வர் முஹைதீன்


























தமிழக மற்றும் காவல்துறையின் சிறுபான்மையினருக்கு எதிரான இத்தகைய போக்கினை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா 17 ஆகஸ்ட் 2011 அன்று தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த முடிவு செய்தது. அதன் ஒரு பகுதியாக 17-08-2011 நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம் சந்தைமுக்கில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சுமார் 2000 திற்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த ஆர்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் எம்.அன்வர் முஹைதீன் தலைமை ஏற்று வழிநடத்தினார்.

மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் A.S.இஸ்மாயில், தேசிய அரசியல் கட்சி SDPI ன் மாநிலத்தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாக்கவி, நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாநிலத்துணை தலைவி A. பாத்திமா ஆலிமா, விடுதலை சிறுத்தை கட்சியின் நெல்லை மாவட்ட செயாலாளர் M.C.கார்த்திக் ஆகிய அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட்ட தமிழக அரசு மற்றும் காவல்துறையினருக்கு எதிராக தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் மட்டுமின்றி ஆங்காங்கே அன்றாட வேலைகளில் ஈடுபட்டிருந்த பொதுமக்களும் சிறுபான்மை உரிமைகளை மீட்டும் நோக்கோடு சுய ஆர்வத்துடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் தங்களை இணைத்து கொண்டனர். ஏன் இந்த ஆர்ப்பாட்டம்? என்று விசாரித்த வழிப்போக்கர்களும், கண்டன உரையை செவிமெடுத்த மேலப்பாளைய வாழ் மக்களும் தமிழக அரசு மற்றும் காவல்துறையின் முஸ்லிம்களுக்கு எதிரான இந்த போக்கினை வன்மையாக கண்டித்தனர்.

சமூக விழிப்பு உணர்வு பொதுக்க௬ட்டம்

இடமிருந்து: சகோதர் சிக்கந்தர் பாஷா, ஹசன் அலி, அம்ஜத் அலி, செய்யது அலி


KIFF- ன் (குவைத் இந்தியா பிராடேர்நிட்டி ப்பாரம்) தமிழ்-பிரிவு சார்பாக 29.07.11 வெள்ளிக் கிழமை அன்று தஸ்மா டீச்சர் சொசிட்டியில் சமுக விழிப்புணர்வு பொதுக்கூட்டம் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.

மாலை 7.15 மணி அளவில் சகோதர் அப்துல்லாஹ் அவர்கள் கிராஅத் ஓதி கூட்டத்தை இனிதே துவக்கி வைத்தார்.

KIFF-சகோதர் சிக்கந்தர் பாஷா அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

KIFF-ன் பொதுச்செயலாளர் ஹசன் அலி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

KIFF- ன் தமிழ்-பிரிவு தலைவர் அம்ஜத் அலி அவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் KIFF- ம் கடந்த ஒரு வருடங்களில் சமுதாய முன்னேற்றத்துக்காக  ஆற்றிய பணிகளை  எடுத்து கூறினார்.

EIFF - துபையின் பொறுப்பாளர் செய்யது அலி அவர்கள் விழிப்புணர்வு அடையும் இந்திய முஸ்லிம்கள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

இறுதியாக சகோதர் சகில் அஹமத் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

இந்த கூட்டத்தில் பெண்கள் உள்பட 200க்கும் அதிகமான குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.