Wednesday, October 3, 2012

நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக்கப்பட்ட ஆ.ராசா- கல்மாடி.. அப்போ ஊழல் விவகாரம்?

 Congress Nominates Raja Suresh Kalmadi
டெல்லி: நாடாளுமன்றத்தின் நிலைக்குழு உறுப்பினராக ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதாகி ஜாமீனில் உள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சரும் திமுக எம்பியுமான ஆ.ராசாவை காங்கிரஸ் நியமித்துள்ளது.

அதே போல காமன்வெல்த் ஊழலில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் சுரேஷ் கல்மாடியும் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். 
இதன்மூலம் இருவரது ஊழல்களையும் மத்திய அரசு லேசாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளது தெளிவாகிறது.
எரிசக்தித்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினராக ராசாவும், வெளி விவகாரத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் உறுப்பினராக கல்மாடியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

300 ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு "மாதாந்திர" நிதி உதவி!


கோழிக்கோட்டில் செயல்படும் "ஹோம் கேர் சென்டர்" மூலம், 300க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு மாதாந்திர நிதியாக தலா 1000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று  துவக்கப்பட்டது.
முதல் கட்டமாக, 4 வயதுக்கு மேற்பட்ட ஏழை மற்றும் பெற்றோரை இழந்த மாணவர்கள் இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.  தங்கள் வீட்டில் இருந்த படியே கல்வி பயிலும் வகையில், கண்ணூர் மற்றும் மலப்புரம் பகுதியை சேர்ந்த 300 மாணவவர்களின் பராமரிப்பு சிலவினங்களுக்காக மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.