Thursday, August 18, 2011

சமூக விழிப்பு உணர்வு பொதுக்க௬ட்டம்

இடமிருந்து: சகோதர் சிக்கந்தர் பாஷா, ஹசன் அலி, அம்ஜத் அலி, செய்யது அலி


KIFF- ன் (குவைத் இந்தியா பிராடேர்நிட்டி ப்பாரம்) தமிழ்-பிரிவு சார்பாக 29.07.11 வெள்ளிக் கிழமை அன்று தஸ்மா டீச்சர் சொசிட்டியில் சமுக விழிப்புணர்வு பொதுக்கூட்டம் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.

மாலை 7.15 மணி அளவில் சகோதர் அப்துல்லாஹ் அவர்கள் கிராஅத் ஓதி கூட்டத்தை இனிதே துவக்கி வைத்தார்.

KIFF-சகோதர் சிக்கந்தர் பாஷா அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

KIFF-ன் பொதுச்செயலாளர் ஹசன் அலி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

KIFF- ன் தமிழ்-பிரிவு தலைவர் அம்ஜத் அலி அவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் KIFF- ம் கடந்த ஒரு வருடங்களில் சமுதாய முன்னேற்றத்துக்காக  ஆற்றிய பணிகளை  எடுத்து கூறினார்.

EIFF - துபையின் பொறுப்பாளர் செய்யது அலி அவர்கள் விழிப்புணர்வு அடையும் இந்திய முஸ்லிம்கள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

இறுதியாக சகோதர் சகில் அஹமத் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

இந்த கூட்டத்தில் பெண்கள் உள்பட 200க்கும் அதிகமான குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

No comments:

Post a Comment