Saturday, September 1, 2012

அஸ்ஸாமை தொடர்ந்து மணிப்பூர் : வங்கத்தின் பெயரால் வதைக்கப்படும் முஸ்லிம்கள்!


வெள்ளையர் ஆட்சிக்காலத்தில், வங்கத்திலிருந்து அழைத்து வரப்பட்ட முஸ்லிம்களை அந்நியப்படுத்தும் அக்கிரமம், இப்போது அஸ்ஸாமை கடந்து மணிப்பூர் மற்றும் நாகலாந்திலும் தலை விரித்தாடுகிறது.
ஆனால், இந்த 2012லும் நேபாள நாட்டிலிருந்து இந்தியாவுக்குள் வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நேபாள நாட்டு பெண்கள் "விபச்சாரத்தொழிலுக்காகவே, அதிகளவில் அழைத்து வரப்படுகின்றனர். முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக, அஸ்ஸாமை தொடர்ந்து இப்போது மனிப்பூரின் "இம்பால்" மற்றும் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் "லைலாங்" மாவட்டத்திலும், முஸ்லிம்களை போலீஸ் அச்சுறுத்தி வருகிறது.

அந்த மக்களிடம் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பல ஆவணங்கள் உள்ள போதும், அவர்கள் பேசும் மொழி (வாங்காளம் மற்றும் உருது) அடிப்படையிலும் முஸ்லிம் மதம் என்ற அடிப்படையிலும் வேறுபடுத்திப்பார்க்கின்றனர். நேற்று முன் தினம் மட்டும் 43 நபர்களின் குடியுரிமை செல்லத்தக்கதல்ல, என கண்டுபிடித்திருப்பதாக சொல்லும் மணிப்பூர் அரசு, நேற்று முன்னூறு நபர்களை பிடித்து வைத்துக்கொண்டு அவர்களில் 6 நபர்கள் ஊடுருவல் காரர்கள் என கதை சொல்கிறது.

எல்லா ஆவணங்களும் வைத்திருந்தும் அவர்கள் கல்வியில் மிகவும் பின்தங்கியிருப்பதால், அவர்களால் சட்ட ரீதியான போராட்டங்களை முன்னெடுத்து செல்ல முடியவில்லை, என்பது தான் வேதனை.  மத துவேஷ கொள்கையுடைய சங்கபரிவாரங்கள் திட்டமிட்டு "ஊடகங்கள்" மூலம் முஸ்லிம்களின் குடியுரிமையை  கொச்சைப்படுத்தி வருகின்றனர். அதே நேரம், மகாராஷ்டிர மாநிலத்தில் வசிக்கும் இந்திய குடிமக்களான தமிழர்கள், பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தை சார்ந்தவர்களையே விரட்டியடிக்கும் "மும்பை ரவுடி" பால் தாக்கரே மற்றும் சிவசேனை கட்சிக்காரர்கள், மும்பை "ரெட் லைட்" பகுதியில் உள்ள 3 லட்சத்துக்கும் மேற்பட்ட "நேபாள நாட்டு விபச்சாரிகளை" கண்டு கொள்வதில்லை.

மும்பையில் தான் என்றில்லை, சென்னை உள்ளிட்ட பல பெருநகரங்களின் "உல்லாச விடுதிகளில் நேபாள நாட்டு இளம் அழகிகளின் ஆதிக்கம்"  இருப்பதை காவல்துறை அதிகாரிகள் நன்கறிவர். இந்திய நாட்டை பொறுத்த வரை முஸ்லிம்களை தவிர வேறு யாராக இருந்தாலும் அவர்கள் எந்த செயல் செய்தாலும் "வந்தாரை வாழ வைக்கும் தத்துவம்" பேசப்படும்.

ஆனால் முஸ்லிம்கள் என்றாலே வேப்பங்காயாய் கசக்கிறது இங்குள்ள விஷ்ம சக்திகளுக்கு. உண்மையில், அஸ்ஸாம் மற்றும் மணிப்பூரில் முஸ்லிம் விவசாயக்கூலிகள் இல்லை என்றால், பஞ்சம் தலைவிரித்தாடும் சூழல் தான் உருவாகும். "ஆயுதங்களை கையாளும் போடோ தீவிரவாத குழுக்களுக்கு விவசாய வேலைகள் செய்யத்தெரியாது" என்பது நாட்டு மக்கள் பலருக்கும் தெரியாது.

தென் மாநில முஸ்லிம்கள் வியாபாரத்தை தேர்ந்தெடுத்துக்கொண்டது போல், வட மாநில முஸ்லிம்கள், குறிப்பாக வடக்கிழக்கு மாநில முஸ்லிம்கள் விவசாயத்தை  தேர்ந்தெடுத்துக்கொண்டு, கடும் உழைப்பை இந்த நாட்டுக்கு கொடுத்துக்கொண்டிருக்கின்றனர் என்றால், அது மிகையாகாது.

No comments:

Post a Comment