Friday, December 30, 2011

ஏழைகளுக்கு கம்பளி போர்வைகளை வழங்கியது பாப்புலர் ஃப்ரண்ட்


குல்பர்கா: கர்நாடகா மாநில பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா சார்பாக குல்பர்கா மாவட்டத்தில் ஏழைகள் குளிரில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காக கம்பளிப் போர்வைகள் வழங்கப்பட்டது. பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா தற்போது அதிக அளவில் கவனம் செலுத்தி வரும் துறையான சமூக மேம்பாட்டு துறையில் மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வருகிறது. அதன் அடிப்படையில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள குல்பர்கா மாவட்டத்தில் உள்ள மக்கள் குளிரிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள கம்பிளி போர்வையின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு போர்வைகளை இலவசமாக வழங்கியது. பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியாவின் குல்பர்கா மாவட்ட தலைவர் டாக்டர். ஹமீது மக்துமி, துணை தலைவர் செய்யது ஜாகிர் மற்றும் திப்பு சுல்தான் எஜுகேசன் சொசைட்டியின் தலைவர் வழக்கறிஞர் அஜிமுதின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment