Tuesday, December 27, 2011

இந்தியா: தடையை மீறி ரெயில் மறியல் எஸ்.டி.பி.ஐ.,யினர் 150 பேர் கைது !



கோவை, டிசம்பர். 26-2011 முல்லை பெரியார் அணை விவகாரத்தில் கேரள அரசின் போக்கை கண்டித்தும், மவுனம் காத்து வரும் மத்திய அரசை கண்டித்தும் 
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் கோவையில் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த மறியல் போராட்டத்திற்க்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.

தடையை மீறி எஸ்.டி.பி.ஐ., மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது தலைமையில் மாநில பொருளாளர் பாஷா மற்றும் மாவட்ட நிர்வாகிகள்
அபுதாஹிர், உம்மர், கட்சி நிர்வாகிகள் ரெயில் நிலையத்துக்குள் செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர் அப்போது 
போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் மற்றும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து தடையை மீறி ரெயில் மறியலுக்கு
முயன்றதாக 150 பேரை போலீசார் கைது செய்தனர். பிறகு மாலை விடுதலை செய்யபட்டது.

செய்தி:புகைப்படம்- கோவை தங்கப்பா

No comments:

Post a Comment