Thursday, December 29, 2011

இந்தியா:மத்திய பட்ஜெட் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படும் .

புதுடெல்லி :நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாத இறுதியில் மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் .அதற்கு முன்பாகவே இரயில்வே பட்ஜெட்டும், பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்படும்,எதிர்ப்பாராத விதமாக பிப்ரவரியில் நாடாளுமன்ற தேர்தல் வந்தால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு பின்னர் புதிய அரசு பதவி ஏற்றதும் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் மற்றபடி வேறு எந்த காரணத்துக்காகவும் பட்ஜெட் தாக்கல் தள்ளிப்போகாது .ஆனால் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது ,தேர்தல் நடவடிக்கைகள் மார்ச் 9-ந் தேதி தான் முடிவடையும் .இதனால் மார்ச் 9 முதல் 15-குள் மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று நிதி அமைச்சக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர் .

No comments:

Post a Comment