Friday, December 30, 2011

இந்தியா: தொகாடியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -பாப்புலர் பிரான்ட்


கோழிகோடு: விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அகில உலக தலைவரான பிரவீன் தொகாடியா மீது மாநில அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள பாப்புலர் பிரான்ட்டின் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் சமூகம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களின் ஓட்டுரிமையை பறிக்க வேண்டும். இதன் பிறகு இந்தியாவை ஹிந்து ராஷ்டிராவாக அறிவிக்க வேண்டும் என்ற தொகாடியாவின் பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.இந்திய தேசத்தின் இறையான்மைக்கும் அதன் வளர்ச்சிக்கும் எதிரான இக்கருத்தை தெரிவித்துள்ளதால் பிரவீன் தொகாடியா மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட  வேண்டும் என கேரள பாப்புலர் பிரான்ட்டின் பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது செய்தி வெளியிட்டுள்ளார் .கொச்சியில் விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் முழுக்க முழுக்க முஸ்லிம்களுக்கு எதிரான துவேஷ கருத்துக்களையே தெரிவித்துள்ளார் .முஸ்லிம்களிடத்தில் இருந்து அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் தொகாடியா .

முஸ்லிம்கள் கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுவதாகவும், வெளிநாடுகளிலிருந்து கருப்பு பணங்கள் பெறப்பட்டு இந்துக்களின் நிலங்களை அபகரிப்பதாகவும், இந்து பெண்களை போலியாக காதலித்து மதமாற்றம் செய்வதாகவும் கூறியுள்ளார் தொகாடியா.எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாத இத்தகைய செய்திகளை கொண்டு மத மோதல்களை ஏற்படுத்தவே சங்கப்பரிவாரங்கள் முயற்ச்சி செய்து வருகின்றன.

மத சாற்பற்று ஒற்றுமையோடு வாழ நினைக்கும் இந்திய மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தவும் அதன் மூலம் இரு சமூகங்கள் மத்தியில் கலவரத்தை ஏற்ப்படுத்தும் நோக்கிலேயே பிரவீன் தொகாடியா இத்தகைய நச்சுக்கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.இதே போன்று கருத்துக்களை வெளியிட்டு வரும் ஹிந்து ஐக்கிய வேதி,விஷ்வ ஹிந்து பரிஷத்,பஜ்ரங்தள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மதச்சார்ப்பற்று இயங்கும் பிற இயக்கங்களும் தங்களுடைய மௌனமான நிலையை கைவிட்டு இத்தகைய வகுப்பு வாத சக்திகளுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்யவேண்டும் என அப்துல் ஹமீது தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment