Saturday, December 31, 2011

குவைத்: ஓட்டுக்கு பணம் - தடுப்பதற்கு குழுக்கள் அமைக்கப்படும்.

குவைத் சிட்டி: வருகின்ற பிப்ரவரி 2 அன்று நடைபெற இருக்கும் பொது தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்கு தனித்தனி குழுக்கள் அமைத்து கண்கானிக்கபோவதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார், இந்த குழுவில் அரசு சாரா அமைப்புகளின் உறுப்பினர்களும் இடம்பெறுவார்கள் என்று கூறினார். குவைத் வெளிப்படை சமூகம், குவைத் வழக்கறிஞர்கள் சங்கம், மற்றும் குவைத் பத்திரிக்கையாளர்கள் சங்கம் போன்ற அமைப்புகள் அடங்கும். மேலும் தேர்தலின் போது அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

No comments:

Post a Comment