Wednesday, December 21, 2011

ஜப்பான்: புகுஷிமா அணுஉலையை முற்றிலும் அகற்ற 30-40 வருடங்கள் ஆகும்



ஜப்பானின் புகுஷிமா நகரத்தில் உள்ள அணுஉலை கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட ஆழிப்பேரலையால் மோசமான பாதிப்புக்கு உட்பட்டது. எதிர்பராத இந்த நிகழ்வின் மூலம் அணுக்கரு உலையின் குளிரூட்டு அமைப்புகள் செயலிழந்தன, அதனால் கதிர்வீச்சு மிக அதிகமாக ஏற்பட்டது. அதனால் ஜப்பான் அரசாங்கம் அந்த அணுஉலையை மூட முடிவு செய்து தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஜப்பானின் வர்த்தக அமைச்சர் யூகி எடனோ வெளியிட்டுள்ள அறிக்கையில் "அணு கழிவுகளை முற்றிலும் வெளியேற்றுவதற்கு அதிக சிரத்தையும், அதிக பொருளாதாரத்தையும் எடுக்க வேண்டியுள்ளது. 15 பில்லியன் அமெரிக்க டாலர் வரை செலவிட வேண்டிவரும்".

No comments:

Post a Comment