Monday, December 12, 2011

ஆர்.எஸ்.எஸ். செய்தி தொடர்பாளராக மாறி விட்டார் அன்னா ஹசாரே:காங்கிரஸ்


மத்திய உருக்குத்துறை மந்திரி பெனி பிரசாத் வர்மா நிருபர்களிடம் கூறியதாவது:- சமீபகாலமாக ராகுல்காந்தியை பற்றி அன்னா ஹசாரே இழிவாக பேசி வருகிறார். அவர் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர்களில் ஒருவர் மட்டுமே. எம்.பி.யாகவும் இருக்கிறார். அவருக்கும் அரசின் செயல்பாடுகளுக்கும் தொடர்பு கிடையாது. ஹசாரே தேர்தல் மூலம் மக்களை சந்திக்க வேண்டும்.
 
ஆர்.எஸ்.எஸ். செய்தி தொடர்பாளராக மாறி விட்டார் அன்னா ஹசாரே:காங்கிரஸ்உத்தரபிரதேசத்துக்கு அவர் வந்து போட்டியிடலாம். அன்னா ஹசாரேக்கு பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு இருக்கிறது. அவர் அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளராகவே மாறி விட்டார். அன்னா ஹசாரே 75 வயதான பெரியவர் என்று குறிப்பிடுகிறார்கள். காங்கிரசுக்கு வயது 125 என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.இவ்வாறு பெனி பிரசாத் வர்மா கூறினார்.

No comments:

Post a Comment