Wednesday, December 28, 2011

சவுதிஅரேபியா: ஷலபி சித்தாந்தத்தை தொடர்ந்து கடைபிடிக்கும்.


ரியாத்: தாங்கள் கடைபிடித்து வரும் ஷலபி சித்தாந்தத்தை தொடர்ந்து சவுதி அரசாங்கம் கடைபிடித்துவரும் என்று இளவரசர் நயீப் "சலபிசிம்-ஷரியாவின் அணுகுமுறையும் தேசத்தின் தேவையும்" என்ற தலைப்பில் இமாம் முஹம்மது பின் சவுத் பல்கலைகழகம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கூறினார். அவர் மேலும் கூறுகையில் "நங்கள் கடைபிடிக்கும் இந்த கொள்கையை தீவிரவாதத்துடனும், பயங்கரவாததுடனும் ஒப்பிட்டு பேசுவதை வன்மையாக கண்டித்தார், இது குரான் மற்றும் ரசூல்(ஸல்) காட்டித்தந்த வழிமுறை" என்று கூறினார். இதற்கு எதிராக பிரச்சாரம் செய்யும் அனைத்து முயற்சிகளையும் முறியடிக்க நாம் முன்வர வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

No comments:

Post a Comment