
'இஸ்லாம் ஓர் அறிமுகம்' என்ற தலைப்பில் உரையாற்றிய ரியாஸ் அஹமது அவர்கள், திருக்குர்ஆனின் தனித்தன்மைகளை சுருக்கமாக கூறினார். நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான மற்றும் மருத்துவ உண்மைகளுக்கு குர்ஆன் முரணானது கிடையாது என்று விளக்கிய அவர், குர்ஆனின் சில முன்னறிவிப்புகளையும் மேற்கோள் காட்டினார். அத்துடன் இஸ்லாத்தின் ஓர் இறை கொள்கை, தூதுத்துவம் மற்றும் மறுமை வாழ்க்கை குறித்தும் சுருக்கமாக கூறிய அவர், குர்ஆன் அனைவருக்குமான வேதம் என்றும் அதனை படிக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக கேள்வி பதில் நிகழ்ச்சி அமைந்தது. கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்துவதில் சிறப்புற்று திகழும் பொறியாளர் ஜகரிய்யா அவர்கள் மாற்று மத அன்பர்களின் கேள்விகளுக்கு விளக்கமாகவும் தெளிவாகவும் பதில்களை வழங்கினார். குர்ஆன் மற்றும் இன்னபிற வேதங்களில் இருந்து மேற்கோள் காட்டி பதில் அளித்தது மக்களை பெரிதும் கவர்ந்தது. பெரும்பாலும் கடவுள் கொள்கை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. சிறந்த கேள்விகளை கேட்டவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களான அனந்த ராமநாதன் மற்றும் ஜக்கரிய்யா இருவருக்கும் இந்தியா பிரடெர்னிடி ஃபோரம் சார்பாக நினைவு பரிசுகளை தம்மாம் தமிழ் மண்டல தலைவர் அஹமது மீரான் அவர்கள் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இலவச புத்தங்களும் சிடிகளும் வழங்க பட்டன. குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்று மத அன்பர்களுக்கான பரிசுகளை மௌலவி ஜக்கி மதனி அவர்கள் வழங்கினார்கள். நாகூர் மீரான் (அபு நாஸிஹா) அவர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார். சிராஜ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் நூற்று இருபது மாற்று மத அன்பர்கள் உள்ளிட்ட முன்னூறு நபர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆறு வருடங்களாக நடத்தப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதையே இது காட்டுகிறது.
No comments:
Post a Comment