
இந்நிலையில் அரசியல் சூழ்ச்சியின் காரணமாக கடந்த வருடம் அக்டோபர் மாதம் 25ஆம் தேதி அன்று நள்ளிரவு வீடு புகுந்து அவரை கைது செய்து குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர் காவல்துறயினர். நான்கு மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்த அமீர் சுல்தானை விடுவிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் அக்கட்சியின் மேலிடம் மேற்கொண்டு வந்தது. கடந்த மாதம் இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வந்தபோது அரசு தரப்பு வழக்கறிஞர் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வாயிதா பெற்று வந்தார்.
மூன்றாவது முறையாக நீதிமன்றத்திற்கு வந்த இவ்வழக்கை எந்தவித காரணமும் இல்லாமல் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபனை தெரிவித்தார். ஆனால் இவ்வழக்கில் அமீர் சுல்தான் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் அபுதாஹிரின் கேள்விகளுக்கு அரசு தரப்பு வழக்கறிஞரால் பதிலளிக்க முடியாமல் போகவே நீதிபதி இவ்வழக்கை பொய் வழக்கு என்று கூறி தள்ளுபடி செய்தார். இந்த தீர்ப்பின் மூலம் ஓரிரு நாட்களில் அமீர் சுல்தான் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment