Wednesday, March 7, 2012

சங்கரன்கோவில் இடைதேர்தல் மதிமுக விற்கு SDPI ஆதரவு

சங்கரன்கோவிலில் அமைச்சர் கருப்பசாமி இறந்ததால் அந்த தொகுதிக்கு இடைதேர்தல் அர்விக்கபட்டுள்ளது.இந்தே தேர்தலில் திமுக ,அதிமுக ,தேதிமக,மதிமுக உட்பட மேலும் பலர் பட்டியிடுகின்றனர்,இந்த தேர்தலில் SDPI யாருக்கு ஆதரவாக உள்ளது என்பதை தெரிய பலர் ஆர்வமாக இருந்தனர்,இந்த் ஆர்வத்தை போக்கும் பொருட்டு SDPI மாநில தலைவர் தெக்லான் பாக்கவி இன்று நெல்லையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.


அப்பொழுது அவர் கூறியதாவது இப்பொழுது உள்ள சூழ்நிலையில் பல மக்கள் பிரச்சினைகளை உறுதியுடன் போராடும் கட்சி மதிமுக மேலும் நம்மிடம் வந்து ஆதரவு கேட்டதன் அடிப்டையில் மதிமுக விற்கு SDPI ஆதரவு கொடுக்கிறது.



இந்த் தேர்தலால் ஆட்சி மாற்றம் எதுவும் நடைபெறாது,ஆனால் ஆளும் கட்சின் குறைகளை சுட்டி காட்ட இது வாய்பாக அமையும் ,அதனால் மதிமுக வேட்பாளர் சதன் திருமலை குமார் அவர்களுக்கு பம்பரம் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுமாறு சங்கரன்கோவில் தொகுதி மக்களை கேட்டுக்கொள்கிறேன்.


பேட்டின் பொழுது மாநில பொது செயலாளர் நெல்லை முபாரக்,மாவட்ட தலைவர் சாகுல் ஹமீத் உஸ்மானி ,மாவட்ட பொது செயலாளர் சிந்தா அலி ,மாவட்ட செயலாளர் பிஸ்மி காஜா மற்றும் ஹபீப் ரஹ்மான் ,மாவட்ட துணை தலைவர் நசீர்கான்,தேசிய செயகுழு உறுப்பினர் ஷேக் தாவுத் மற்றும் மாவட்ட,நகர உறுப்பினர் பலர் உடன் இருந்தனர்

No comments:

Post a Comment