Friday, February 10, 2012

களவாணி ஜெயாவை காப்பாற்ற கை கோர்க்கும் காவி அரசு ?



அரசு தலைமை வழக்கறிஞர் பதவியில் இருந்து, ஆச்சார்யா நேற்று (08.02.2012) ராஜினாமா செய்தார். பதவி விலகியது ஏன் என்று ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து விலகுமாறு கர்நாடக அரசு என்னை தொடர்ந்து வற்புறுத்தியது. இந்த வழக்கு விசாரணையை ஜெயலலிதாவுக்கு ஆதரவாக திசை திருப்ப வேண்டும் என்பதற்காக, பாஜகவின் டெல்லி மேலிடத்தின் உத்தரவின் பேரிலேயே கர்நாடக அரசு எனக்கு நெருக்கடி கொடுத்தது. 


பாஜக மேலிடத்தின் இந்த நெருக்கடி எடியூரப்பா முதல் அமைச்சராக இருக்கும் வரை எடுபடவில்லை. தற்போது முதல் அமைச்சர் சதானந்த கவுடா மூலம் அதனை நிறைவேற்ற பாஜக மேலிடம் முயற்சி செய்கிறது. அந்த நேரத்தில் ஆசை காட்டும் விதமாகவே, அரசு தலைமை வழக்கறிஞர் பதவி கொடுக்கப்பட்டது. அதனை ஏற்று சொத்து குவிப்பு வழக்கின் சிறப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிடுவேன் என்று கர்நாடக அரசு தப்புக் கணக்கு போட்டுவிட்டது. 



மேலும் ப ஜ க அரசு நெருக்குதல் தந்ததுதான் தலைமை வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறியுள்ளார். (தேர்தல் நேரத்தில் அடி மேல் அடி ப ஜ க வுக்கு ஒருபக்கம் பார்லிமெண்டில் ஆபாச படம்பார்த்த ப ஜ க எம் பி, இன்னொரு பக்கம் இன்று இது, நாளை எதுவோ?)

No comments:

Post a Comment