Tuesday, February 7, 2012

அரசியலின் பெயரில் விஷமப் பிரச்சாரம்!


உலக அரங்கில் மதச்சார்பற்ற நாடு இந்தியா மட்டும் தான் என்று நாம் சொல்லும் போது நம்மை அறியாமலேயே நம்மிடம் உணர்வுபூர்வமான தேசப்பற்று வெளிப்படும்அதை நாம் உண்மையான தேசப்பற்று என்று கூட கூறலாம்.  

மேலும் அதற்க்கு ந்தவிதமான மதமும், ஜாதியும் தடையல்ல என்பது நம்முடைய தேசப்பற்றின் அடையாளம் என்று கூடசொல்லலாம். ஆனால் இந்தியாவை இந்துராஷ்ட்ரமாக அறிவிக்க வேண்டும் என்ற தங்களின் கொள்கையை உறுதி செய்யும் விதமாக உ.பி தேர்தல் பிரச்சாரத்தின் போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் தான் எனது லட்சியம் நிறைவேறும் என்று பாபர் மஸ்ஜித் இடிப்பு புகழ் அத்வானி கூறியுள்ளது இந்தியாவின் மதசார்பற்ற கொள்கையை தகர்தெரிவதாகத்தான் உள்ளது.  

அவர் கூறுவது  போல் ராமர் கோவில் இந்திய மக்களின் உணர்வுபூர்வமான விஷயம் அல்ல மாறாக அவர்களின் வர்ணாசிரம கொள்கையை மறுபடியும் கொண்டுவர துடிக்கும் அவர்களின் எண்ணத்தின் வெளிபாடு என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. எந்த ஒரு உண்மையான இந்திய குடிமகனுக்கும் இவருடைய இந்த கூற்றில் உடன்பாடு இருக்க வாய்ப்பில்லை என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.

இதுபோன்று விஷமப்பிரச்சாரத்தால் மதக்கலவரத்தை தூண்டி மக்களை மீண்டும் பிரித்து ஆட்சியில் அமர்ந்துவிடலாம் என்று என்னிகொண்டிருக்கும் அத்வானியின் எண்ணம் வெறும் பகல் கனவு தான், இதற்கு கடந்த மக்களவை தேர்தலில் அயோத்தி தொகுதியிலேயே கூட பிஜேபி வெற்றி பெற முடியவில்லை எனபது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெளிவாகிறது. 

இதுபோன்று இந்து தீவிரவாதிகளால் தான் இந்தியா வளரும் நாடாகவே உள்ளது. இந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் தேசத்தை இந்த பாசிசவாதிகளின் கரங்களில் இருந்து காக்க வேண்டும்.
முஹம்மது அபூபக்கர் 

1 comment:

pops said...

dear abu
kindly correct the spell தகர்தெரிவதாகத்தான்

Post a Comment