Wednesday, February 8, 2012

உறவுகளுக்காக உணர்வை தொலைத்தவன்..


புண் பட்ட மனதுடன் விண்ணிலே
பறந்து வந்தேன்,
புதுமையான இடத்தை பார்த்து
போலிப் புன்னகையும் கொண்டேன்
சிநேகிதங்கள் சலாம் சொல்ல(போனில்)
சிந்தனைகள் ஊர் பக்கம்
அறியாத இடம் என்றாலும்
எளிதாக வேலையில் சேர்ந்தேன்,
இனிதான் நமக்கு நல்ல காலம் என்றால்!
நிறைவான ஊதியம் இல்லை,
உறவுகளுக்கு அனுப்ப வேண்டி
சம்பள வரவுக்காக காந்திருந்து
செலவுக்கு அனுப்பி வைத்த பணம்
அன்றாட உணவுக்குகூட போதவில்லை,
விழிகளுக்கு ஓய்வு கொடுக்காமல் உழைக்க
வேறு வழிகளையும் தேடி நடக்கிறேன்,
முடிந்தவரை உழைக்கிறேன் முடியாமல்
இருக்கிறது என் கடன்
நான் படும் கவலைக்கு பஞ்சமில்லை
நான் பட்டிருக்கும் கடனும் கொஞ்சமில்லை
நித்தமெல்லாம் வாடுகிறேன்
இறைவா தினமும் உன் அருளைத் தேடுகின்றேன்
யூசுப் 

No comments:

Post a Comment