
மத்திய மந்திரி சரத்பவாரை அடித்தவர், மர்ம மனிதர்களால் கடத்திச்சென்று தாக்கப்பட்டார். மிரட்டல் காரணமாக தலைமறைவாக வாழ்கிறார். முன்னாள் தொலைபேசி துறை மந்திரி சுக்ராம் மற்றும் விவசாயத்துறை மந்திரி சரத்பவார் ஆகியோர் பொது இடத்தில் வைத்து தாக்கப்பட்டனர். இவர்கள் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, கடந்த நவம்பர் மாதம் ஹர்விந்தர்சிங் என்ற இளைஞர்இவர்களை தாக்கினார். சரத்பவாரை கன்னத் தில் அறைந்தார். இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இது தனது 'சமூக சேவை' என்று ஹர்விந்தர் சொன்னார். போலீசாரால் கைது செய்யப்பட்ட ஹர்விந்தர் சிறையில் அடைக்கப்பட்டார்.