பின்னர் சகோதரர் ஹசன் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.அதன் பிறகு ஆரோக்கியம் சம்பந்தமான புத்தகம் வெளியிடப்பட்டது.அதை KIFF-இன் தலைவர் அப்துல் சலாம் வெளியிட KIFF-இன் தமிழ் பிரிவு தலைவர் அம்ஜத் அலி அவர்கள் பெற்று கொண்டார்கள்.அது தமிழ்,மலையாளம்,கன்னடம்,இங்கிலீஷ்,உருது என 5 மொழிகளில் வெளியிடப்பட்டது.
அதன் பிறகு சகோதரர் சைபுதீன் மௌலவி அவர்கள் உரை நிகழ்த்தினார்.அவர் தனது உரையில் "தனி மனிதர்களின் ஆரோக்கியம் மற்றும் நலனில் நாம் கவனம் செலுத்துவது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாதது.நம்மில் பலருக்கு ஆரோக்கிய வாழ்க்கை பற்றிய விழிப்புணர்ச்சி இல்லை அவ்வாறு ஆரோக்கிய வாழ்க்கை பற்றிய விழிப்புணர்ச்சி வழி வாழ முயர்ச்சியும் இல்லை பெரும்பாலானவர்கள் மருந்து மாத்திரைகளை உட்கொண்ட பிறகு தான் தினசரி அலுவல்களையே தொடங்குகிறார்கள்" என்று நாம் நமது ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவத்தை விவரித்தார்.
மேலும் உடற்பயிச்சியின் செய்முறை விளக்கங்களை சகோதரர் ஷம்நாத் விளக்கி கூறினார்.அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் அதில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.அதன் பிறகு கயிறு இழுக்கும் போட்டியும்,மாரத்தான் போட்டியும் நடைபெற்றது.அதில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment