ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் விவசாய திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என புதுடெல்லியில் இஸ்ரேல் தூதரகத்தில் இத்திட்டத்தின் தலைவர் யஹேல் விலன் அறிவித்துள்ளார்.
மாநில அரசுகளின் உதவியுடன் நடைமுறைபடுத்தப்படும் இத்திட்டத்தின் நோக்கம் விவசாய பொருட்களின் விளைச்சலை அதிகரிக்கவும் இஸ்ரேலின் தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு கற்றுகொடுப்பதும் ஆகும் என யஹேல் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் ௩௦க்கும் மேற்பட்ட செயல் திட்டங்கள் உருவாகும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்த யஹேல் ஏற்கனவே குஜராத், ஹரியானா மாநிலங்களில் ஒரு சில செயல்திட்டங்களில் இஸ்ரேல ஒத்துழைக்கிறது என கூறினார்.
No comments:
Post a Comment