Sunday, January 8, 2012

ஜப்பான்: அணு உலைகளை முழுவதும் மூட அரசு முடிவு

புகுஷிமா: கடந்த ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தாலும், சுனாமியாலும் மிகப்பெரிய இழப்புகளை சந்திக்க நேரிட்டது, இதில் புகுசிமாவில் உள்ள அணு உலை வெடித்து கதிர்வீச்சு பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. 


இதன் பிறகு அணு உலை பரவலாக சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டது எனவே ஜப்பான் தனது அணு கொள்கையில் மாற்றம் கொண்டுவந்துள்ளது.



சுனாமியால் சேதமடைந்த புகுஷிமா அணு உலை 1976-ம் ஆண்டு கட்டப்பட்டது, மத்திய ஜப்பானில் உள்ள பிருகா மற்றும் மிகாமா உலைகள் ௧௯௭௦-ம் ஆண்டு கட்டப்பட்டது. 


இது தனது உற்பத்தியை தொடங்கி நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டது, இதை முற்றிலும் அழிக்க ஜப்பான் அரசு முன்வந்துள்ளது. இந்த முடிவை மேற்கொள்ளும் பட்சத்தில் 54-க்கும் மேற்பட்ட அணு உலைகள் மூடப்படும்.

No comments:

Post a Comment