Friday, January 20, 2012

குவைத்: அத்தியாவசிய பொருட்களின் விலை உயருகிறது.

அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றின் விலை உயரும் என்று பயன் கூட்டுறவு சங்கத்தின் துணை தலைவர் எமாத் அல்-பரஜாஸ் கூறியுள்ளார், இது கடந்த ஆண்டை விட ஐந்து சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்றார். 


மேலும் அவர் கூறியதாவது "கடந்த ஆண்டு 15 சதவிகிதம் விலை உயர்வு இருந்தது, ஆனால் இந்த ஆண்டு 20 சதவிகிதமாக இருக்கும். இதற்கு சிரியாவில் உள்ள அரசியல் சூழ்நிலைகளே முக்கிய காரணம்,
ஏனென்றால் அரஞ்சு, லெமன்,காய்கறிகள் போன்ற பெரும்பாலான பொருட்களை சிரிய எல்லை வழியாகத்தான் கொண்டு வரவேண்டும் ஆனால் சிரியாவில் நிலவும் அரசியல் மாற்றங்களால் சிரிய எல்லை மூடும் அபாயம் உள்ளத்தால் இந்த விலை ஏற்றம் எதிர்பார்க்கப்பட்டது. இதில் கசப்பான உண்மை என்னவென்றால் குவைத் குடிமக்களும், வெளிநாட்டவர்களும் விலை ஏற்றத்தை சமாளிக்கக்கூடிய திட்டங்களை வகுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் உள்ளனர்" என்று கூறினார்.

No comments:

Post a Comment