Monday, January 23, 2012

ஒபாமாவை படுகொலை செய்வதற்கு மொஸாதிற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்-யூத பத்திரிக்கை.


ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுக்க தவறிய அமெரிக்க அதிபர் ஒபாமாவை படுகொலை செய்ய மொஸாதிற்கு உத்தரவிட வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யகுவிடம் யூத பத்திரிக்கை ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவில் இருந்து பிரசுரமாகும் அட்லாண்டிக் ஜூயஸ் டைம்ஸின் ஜனவரி 13-ஆம் தேதி எடிட்டோரியல் பக்கத்தில் எழுதியுள்ள கட்டுரையில், இஸ்ரேலுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாத நிலைபாட்டை மேற்கொள்ளும் ஒபாமாவை கொலை செய்ய உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இப்பத்திரிக்கையின் உரிமையாளர் ஆண்ருட் அட்லர் என்பவர் தாம் இக்கட்டுரையை எழுதியுள்ளார். 



ஹிஸ்புல்லாவையும், ஹமாஸையும் தாக்குவதற்கும், ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழிக்கவும் இக்கட்டுரையில் கோரிக்கை விடுக்கும் ஆட்லர், ஒபாமாவை கொலை செய்வது இஸ்ரேலுக்கு உகந்தது. இக்கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவிலும், இஸ்ரேலிலும் கண்டனங்கள் எழுந்ததை தொடர்ந்து ஆட்லர் வருத்தம் தெரிவித்துள்ளார்.


வாசகர்களின் பதிலை எதிர்பார்த்து இக்கட்டுரையை எழுதியதாகவும், வேண்டுமென்றே எழுதவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். இஸ்ரேலுக்கு உரிய முன்னுரிமை அளிக்கவில்லை என்று குடியரசு கட்சி குற்றம் சாட்டியுள்ளதும், ஈரான் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று இஸ்ரேல் துணை பிரதமர் குற்றம் சாட்டியிருப்பதும் குறுப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment