Saturday, July 28, 2012

அஸ்ஸாம் மக்கள் புறக்கணிப்பு : அன்னா ஹசாரே சாயம் வெளுத்தது!


ஊழலை ஒழிப்பேன் - நாட்டை காப்பேன் என வீர முழக்கமிட்டு வரும் சுய நலப் பேர்வழி அன்னா ஹசாரேவின் பொய் முகம் கிழிந்தது.


நாட்டின் மீது அக்கறையுள்ளவர் ஹசாரே என்ற எண்ணத்தில் டெல்லிவாழ் அஸ்ஸாம் மாநில தொழிலாளர்கள், நேற்று ஹசாரே குழுவை சந்தித்து அஸ்ஸாம் பிரச்சினைக்கும் சேர்த்து குரல் கொடுப்பார், என்ற நல்லெண்ணத்தில், ஹசாரே குழுவை சந்திக்க டெல்லி "ஜன்தர் மன்தர்" சென்றனர்.  

ஹசாரே குழுவோ, அஸ்ஸாம் மக்களை தங்கள் கூட்டத்தில் சேர்க்க மறுத்ததோடு, அவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். 


உண்மையில் நாட்டின் மீது அக்கறையுள்ள ஒரு குழுவாக ஹசாரே குழு இருக்குமானால், அஸ்ஸாம் படுகொலையை கண்டித்து அவர்களாகவே குரல் கொடுத்திருக்க வேண்டும். 


ஆனால் அவர்களை சந்தித்து ஆதரவு கேட்க சென்றவர்களையும்  விரட்டியடித்த சுய நலக்கும்பலுக்கு, மக்களிடம் ஆதரவு திரட்ட எந்த அருகதையில்லை, என்பதை அவர்களது செயல் நிரூபித்துள்ளது.

No comments:

Post a Comment