Tuesday, July 3, 2012

கொடூர கொலைகாரன் "மோடி" : பா.ஜ.க.வினர் புதிய போஸ்டர் !


நரேந்திர மோடிக்கு எதிராக,  பா.ஜ.க.வின்  முக்கிய தலைவரும் முன்னாள் குஜராத் முதலமைச்சருமான, கேஷுபாய் பட்டேல் ஆதரவாளர்கள் போஸ்டர் யுத்தம் நடத்தி வருகின்றனர்.
"கொடுமைக்கார மாமியாராக" சித்தரித்து மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டருக்கு கிடைத்த அமோக ஆதரவைத்தொடர்ந்து, தற்போது, நரேந்திர மோடியை "கொடூர கொலை காரன்" என்று போஸ்டர் போட்டுள்ளனர். இம்முறை, நரேந்திர மோடிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், பா.ஜ.க. கட்சியையும் குற்றம் சுமத்தி வாசகம் போட்டுள்ளனர்.  

முன்னாள் அமைச்சர் "ஹரேன் பாண்டியாவை" கொன்றது யார்? என்ற கேள்விக்கு நேரில் மோடியின் படத்தை போட்டுள்ளனர்  "லைலா பென்னை" கொலை செய்தது யார்? என்ற வாசகத்துக்கு எதிரிலும் மோடியின் படத்தையே போட்டுள்ளவர்கள்,   RTI சமூக ஆர்வலர்களை கொன்றவர்கள்  யார்?   என்ற சொல்லுக்கு எதிரில் பா.ஜ.க. கட்சி சின்னமான "தாமரை"யை அச்சடித்து மாநிலம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment