Sunday, May 13, 2012

சர்கோசி மீது ஊழல் புகார்


பிரான்சில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசியை சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் பிராங்கோய்ஸ் ஹோலண்டே தோற்கடித்தார்.
இவர் எதிர்வரும் 15ஆம் திகதி ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். இந்நிலையில் சர்கோசி மீது ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது.
மேலும் அவர் சட்டத்துக்கு புறம்பாக தேர்தல் நிதி வசூலித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனவே அவர் மீது விசாரணை நடத்தப்பட உள்ளது. வருகிற ஜூன் மாதம் மத்தியில் விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment