Sunday, May 13, 2012

10 நாட்களில் குடும்ப அட்டை திட்டம்!

சென்னை, மே 13- ரேஷன் பொருட்கள் எதுவும் வேண்டாம்; முகவரியை உறுதிப்படுத்த மட்டுமே குடும்ப அட்டை தேவை என்றால், புதிய அட்டைகள் 10 நாளில் வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இதுபோன்று, தட்கல் முறையில் கார்டு தேவைப்படுபவர்கள், 2 அல்லது 3 ஆண்டுகள் அந்த பகுதியில் இருந்ததற்கான இருப்பிட சான்றிதழை மட்டும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். மண்டல அதிகாரிகள் அந்த முகவரிக்கு வந்து பரிசோதனை செய்வர். உண்மையில் அதே முகவரியில் இருப்பது உறுதி செய்யப்பட்டால், உடனே தட்கல் முறையில் ரேஷன் கார்டு வழங்கப்படும்.

இந்த குடும்ப அட்டையை வைத்து, பாஸ்போர்ட் போன்ற காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ரேஷன் பொருட்கள் எதுவும் இவர்களுக்கு கிடைக்காது. இதற்கு நூறு ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த தகவல்களை உணவுப் பொருள் வழங்கல் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment