Monday, August 6, 2012

குவைத் இந்தியா ஃபிரடர்நிட்டி ஃபாரம் (KIFF)-ன் சார்பாக நடைபெற்ற இ ஃ ப்தார் விருந்து நிகழ்ச்சி

குவைத்: குவைத் இந்தியா ஃபிரடர்நிட்டி ஃபாரம் (KIFF) பாஹீல் கிளை நடத்திய இப்தார் விருந்து நிகழ்ச்சி நேற்று  மங்காபில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. 

சரியாக மாலை 5.45க்கு சகோதரர். ஷகீல் அவர்களின் துவக்கவுரையுடன் இனிதே ஆரம்பமானது. மேலும் நிகழ்ச்சி அனைத்தையும் அவரே தொகுத்து வழங்கினார். 

பின்னர் கலீலுர் ரஹ்மான் பாகவி அவர்கள் "வெற்றி அடைந்த குரான்" என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள், அவர் குறிப்பிடும் போது "குரானை வாழ்வியல் நெறியாகவும், வாழ்க்கை வழிகாட்டியாகவும் இருந்தால் ஈருலகிலும் வெற்றியாளர்களாக திகழ முடியும் என்ற உண்மையை நினைவுபடுத்தினார்கள், அதை பல வரலாற்று சம்பவங்கள் மூலம் அழகுற எடுத்துரைத்தார்கள்". 

அதன் பிறகு ரிகாப் இந்தியா ஃபவுண்டேசென் டிரஸ்ட் சார்பாக ஒரு ஆவன படம் காண்பிக்கப்பட்டது, அதில் முஸ்லிம்கள் இன்றைய இந்தியாவில் எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அதிலிருந்து முஸ்லிம் சமூகத்தை மீட்டெடுக்கும் முறையில் ரிகாப் இந்தியா ஃபவுண்டேசென் டிரஸ்ட்  ஆற்றிவரும் தொண்டுகளை பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தது. 

இறுதியாக சகோதரர். ராசிக் ரஹ்மான் நன்றியுரையுடன் இனிதே நினரையுற்றது. மேலும் சகோதரர். உஸ்மான் அவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அதை தொடர்ந்து ப்தார் விருந்து நடைபெற்றது, இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். 

நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்:





No comments:

Post a Comment