Thursday, September 5, 2013

ஆஃப்கான் பாராளுமன்றத்தில் ஹிந்துக்கள், சீக்கியர்களுக்கு இட ஒதுக்கீடு! அதிபர் கர்சாய் அறிவிப்பு!

ஆஃப்கன் பாராளுமன்ற மக்களவை தேர்தலில் இந்து மற்றும் சீக்கிய மதத்தை சேர்ந்தவர்களுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கி ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாய் உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் தற்போது 250 ஆக இருக்கும் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்களின்
எண்ணிக்கையில் இனி ஒரு இந்துவும், ஒரு சீக்கியரும் இடம் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றம் செயல்படாத வேளைகளில் சில சிறப்பு அறிவிப்புகளை வெளியிடும் அதிகாரம் அதிபருக்கு உள்ளது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி இந்த புதிய அறிவிப்பை ஹமித் கர்சாய் இன்று வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment