Wednesday, September 4, 2013

மோடி பதவி விலக வேண்டும்: சி.பி.எம்.!

புதுடெல்லி: போலி என்கௌண்டர்களுக்கு ஒப்புதல் அளித்தது மோடிதான் என்று ஒரு சிறையிலுள்ள போலீஸ் அதிகாரி கூறியிருப்பதால் மோடி பதவி விலக வேண்டும் என்றும், அவர் மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என்றும் சி.பி.எம். கூறியுள்ளது.

“இது சம்பந்தப்பட்ட வழக்குகளில் மோடியை சேர்க்க வேண்டும், ஆதலால் அவர் பதவி விலக வேண்டும்” என்று சி.பி.எம். இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

“அமித் ஷாவின் ஜாமீனும் ரத்து செய்யப்பட வேண்டும். பெரும்பாலான மக்களுக்கு மோடிதான் அனைத்து கொலைகளுக்கும் காரணம் என்று தெளிவாகத் தெரியும். அதனை இன்று வன்சாரா வெளிப்படையாக தனது இராஜினாமா கடிதத்தில் உறுதிப்படுத்தி விட்டார்.

என்கௌண்டர் கொலைகள்தாம் குஜராத் அரசின் கொள்கையாக இருந்துள்ளது என்பதும் இந்தக் கடிதத்தின் மூலம் உறுதியாகிவிட்டது” என்று சி.பி.எம். மேலும் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

No comments:

Post a Comment