Monday, October 21, 2013

ஈத் பெருநாளை முன்னிட்டு KIFF நடத்திய விளையாட்டு​ப் போட்டி..

குவைத்தில் பல்வேறு சமூக நல பணிகளை செய்துவரும் குவைத் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (KIFF) ஈத் பெருநாளை முன்னிட்டு விளையாட்டு தின விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. 

கடந்த 18-10-2013 வெள்ளி அன்று ரிக்கா மைதானத்தில் வைத்து நடந்த இந்த நிகழ்வில் கால் பந்தாட்டம், கபடி, கை பந்தாட்டம், ஒட்டப்பந்தையம், கயிறு இழுக்கும் போட்டி உள்பட பல விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. கால்பந்து, கைப்பந்து, கபடி போட்டிகளில் வென்றவர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. 


ப்ளூ, ரெட், க்ரீன், எல்லோ, ஆரென்ஜ் அணிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிபபடுத்தினர். இறுதியாக ஆரென்ஜ் அணி 18 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், ரெட் அணியினர் 17 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். ப்ளூ மற்றும் க்ரீன் அணியினர் 6 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொண்டனர். இதல்லாமல் பார்வையாளர்களுக்கான விளையாட்டுப் போட்டி, சிறுவர்கள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

மதியம்  2 மணிக்கு ஆரம்பித்த போட்டிகள் இரவு  8.30 மணி வரை தொடர்ந்தன. இறுதியாக பரிசளிப்பு விழா நடைப்பெற்றது. குவைத் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் இந்த நிகழ்ச்சிக்கு விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. அதன் தன்னார்வச் செயல்வீரர்கள் சுழன்று சுழன்று சேவைகள் புரிந்தனர். 







குவைத்தின் பல பாகங்களிலிருந்தும் பொதுமக்கள் குடும்பத்துடன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். விடுமுறை தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய திருப்தி அவர்களின் முகங்களில் தெரிந்தது.



No comments:

Post a Comment