Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Thursday, September 12, 2013

உ.பி கலவரத்தில் அரசியல் சதி: ஷிண்டே!

புதுடெல்லி:உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற கலவரத்தின் பின்னணியில் அரசியல் சதி இருக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே சூசகமாகத் தெரிவித்தார்.
மாநிலத்தின் முஸாஃபர்நகர் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் இரு வகுப்பினருக்கு இடையே கடந்த சனிக்கிழமை கலவரம் மூண்டது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆகியுள்ளது. வன்முறையில் காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற கலவரத்தின் பின்னணியில் அரசியல் சதி உள்ளதாக மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டேவிடம் டெல்லியில் செய்தியாளர்கள் புதன்கிழமை கேட்டனர். அதற்குப் பதிலளித்து அவர் கூறியது:

Saturday, September 7, 2013

மோடி பதவி விலக்கோரி குஜராத்தில் முழு அடைப்பு!

போலி என்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட வன்சரா, முதல்வர் மோடிக்கும் இதில் தொடர்பு உண்டு என பகிரங்கமாக குற்றசாட்டுகளை கூறியிருந்தார். இந்நிலையில் மோடி பதவி விலக கோரி குஜராத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
இதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் முன் எச்சரிக்கையாக கைது செய்யப்பட்டனர்.
குஜராத்தில் நடந்த போலி என்கவுண்டர் தொடர்பான வழக்கில் போலீஸ் அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவரான டி.ஜி.வன்சாரா ராஜினாமா செய்தார். மேலும் முதல்வர் நரேந்திர மோடி மீது குற்றம் சாட்டி அரசுக்கு பரபரப்பு கடிதம் அனுப்பினார். அரசின் கொள்கைகளைத்தான் செயல்படுத்தினேன். தனது நண்பர் அமித்ஷாவை காப்பாற்ற முயற்சி எடுத்த மோடி என்னை பாதுகாக்க தவறி விட்டதாக அதில் கூறியிருந்தார்.

Wednesday, September 4, 2013

மோடி பதவி விலக வேண்டும்: சி.பி.எம்.!

புதுடெல்லி: போலி என்கௌண்டர்களுக்கு ஒப்புதல் அளித்தது மோடிதான் என்று ஒரு சிறையிலுள்ள போலீஸ் அதிகாரி கூறியிருப்பதால் மோடி பதவி விலக வேண்டும் என்றும், அவர் மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என்றும் சி.பி.எம். கூறியுள்ளது.

“இது சம்பந்தப்பட்ட வழக்குகளில் மோடியை சேர்க்க வேண்டும், ஆதலால் அவர் பதவி விலக வேண்டும்” என்று சி.பி.எம். இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

“அமித் ஷாவின் ஜாமீனும் ரத்து செய்யப்பட வேண்டும். பெரும்பாலான மக்களுக்கு மோடிதான் அனைத்து கொலைகளுக்கும் காரணம் என்று தெளிவாகத் தெரியும். அதனை இன்று வன்சாரா வெளிப்படையாக தனது இராஜினாமா கடிதத்தில் உறுதிப்படுத்தி விட்டார்.

‘குஜராத் அரசின் கொள்கையைத்தான் நாங்கள் செயல்படுத்தினோம்!’ - போலி என்கவுண்டர் போலீஸ் அதிகாரி டிஜி வன்சரா மோடி மீது குற்றச்சாட்டு!

குஜராத்தில் நடைபெற்ற போலி என்கவுண்டர்கள் தொடர்பாக, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் உயர் போலீஸ் அதிகாரி டிஜி வன்சரா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மேலும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளையும் அக்கடிதத்தில் எழுதியுள்ளார். இக்கடிதத்தை குஜராத் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளருக்கு வன்சரா அனுப்பியுள்ளார்.
குஜராத்தில் நடைபெற்றுவரும் பாஜக ஆட்சியில் சுமார் இருபதுக்கும் மேற்ப்பட்ட போலி என்கவுண்டர்கள் நடந்துள்ளன. குஜராத் போலீஸால் போலி என்கவுண்ட்டரில் சொராஹ்புதீன் ஷேக் என்பவர் கொல்லப்பட்டார். பின்னர் அவரது மனைவியும், என்கவுண்டர் சாட்சியான பிரஜாபதி ஆகியோரும் போலி என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டனர். இது போல் மேலும் சில போலி என்கவுண்ட்டர்கள் நடந்ததும் தெரியவந்தது. இந்த போலி என்கவுண்ட்டர்கள் பற்றி சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது.

குஜராத் அரசின் லோக் ஆயுக்தா மசோதா! - திருப்பி அனுப்பினார் ஆளுநர்!


குஜராத் மாநில அரசு கொண்டு வந்த லோக் ஆயுக்தா கமிட்டி மசோதாவை மறு ஆய்வு செய்யும்படி, ஆளுநர் கமலா பெனிவால் திங்கள்கிழமை அரசுக்கு திருப்பி அனுப்பினார்.
இந்த மசோதா கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
லோக்ஆயுக்தா நீதிபதி தேர்வு, கமிட்டியின் நியமனம் தொடர்பான அனைத்து ஆதிகாரங்களும் முதல்வருக்கே அளிக்க இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

போலி என்கவுண்டர்: அமித்ஷாவை தப்ப வைக்கும் முயற்சி! ஸ்டிங் ஆபரேசன் மூலம் அம்பலம்!

துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கில் குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சரும், மோடியின் நெருக்கமான அமித்ஷாவை தப்ப வைக்க செய்த முயற்சி ரகசிய கேமரா ஆபரேசன் மூலம் வெளிவந்துள்ளது.
பா.ஜ.க செய்தி தொடர்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான பிரகாஷ் ஜாவேத்கர், பூபேந்தர் யாதவ் எம்.பி, பா.ஜ.க பொதுச் செயலாளர் ராம்லால் குப்தா ஆகியோர் நடத்திய சதித்திட்டம் பத்திரிகையாளரான புஷ்ப குமார் ஷர்மா, ரகசிய கேமரா ஆபரேசன் மூலம் உண்மையை வெளிக்கொணர்ந்துள்ளார்.

பொருளாதார வீழ்ச்சியை சரி செய்ய சர்வதேச நாணய நிதியத்தை மத்திய அரசு நாட வேண்டும்! – தேசிய தலைவர் கோரிக்கை


இந்தியாவின் தற்பொதைய பொருளாதார வீழ்ச்சியை சரி செய்ய மத்திய அரசு சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவர் சையத் தெரிவித்துள்ளார்.இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் குறைந்திருப்பது உள்ளிட்டவை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இறங்குமுகமாகவே செல்கிறது. அதலபாதாளத்திலிருக்கும் இந்திய பொருளாதாரத்தை கட்டுக்குள் கொண்டுவருவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை குலைக்கும் என்பதில் சந்தேகமில்லை.வங்கதேசம், இந்தோனேஷியா போன்ற சிறிய நாடுகள் கூட பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணும்போது, இந்தியாவுக்கு மட்டும் ஏன் அவ்வாறு ஏற்படவில்லை.

Tuesday, September 3, 2013

உணவுப் பாதுகாப்பு மசோதா: மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம்!

காங்கிரஸ் அரசின் கனவுத் திட்டமான உணவுப் பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று மாநிலங்களவையில் நீண்டநேர விவாதத்திற்குப் பின்னர், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
எதிர்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் தெரிவிக்கப்பட்ட திருத்தங்கள், நிராகரிக்கப்பட்டன. அதன் பின்னர், மசோதா குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதில் உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Monday, September 2, 2013

ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் செய்தால் ரூ. 57,000 கோடி லாபம் : வீரப்ப மொய்லி

அமெரிக்கத் தடையை மீறி இந்தியா ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் ரூ, 57,000 கோடியை மிச்சப்படுத்த முடியும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி யோசனை தெரிவித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாகக் கூறி அந்த நாட்டுடன் எந்த வர்த்தகமும் செய்யக் கூடாது என்று ஐ.நாவில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்திருந்தது நினைவிருக்கலாம் எனினும் இந்தியா பழைய ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாங்குவதாகக் கூறி ஈரானிடம் வர்த்தகத்தைத் தொடர்ந்து வந்தது.
தற்போது ஈரானுடனான 27 சத எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியதும் ரூபாயின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகச் சொல்லப்பட்டு வருகிற நிலையில், வீரப்ப மொய்லியின் யோசனை நல்லதாக அமையும் என்பதால் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் இந்த யோசனையை வரவேற்றுள்ளார்..

வக்ஃப் சொத்துக்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த ரூ.500 கோடி முதலீட்டில் தேசிய வக்ஃப் கார்ப்பரேசன்! - மத்திய அரசு முடிவு!

வக்ஃப் சொத்துக்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் நோக்கில் ரூ.500 கோடி முதலீட்டில் உருவாக்கும் தேசிய வக்ஃப் டெவலப்மெண்ட் கார்ப்பரேசனின் நடவடிக்கைகளை வேகமாக முன்னெடுக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
வக்ஃப் சொத்துக்களில் இருந்து வருமானத்தை உருவாக்கி அதனை முஸ்லிம் சமுதாயத்தின் நலனுக்காக பயன்படுத்தவே வக்ஃப் கார்ப்பரேசனை மத்திய அரசு உருவாக்குகிறது. இதுத் தொடர்பாக மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ரஹ்மான் கான், உயர் அதிகாரிகள், மத்திய வக்ஃப் கவுன்சில் உறுப்பினர்கள் இன்று விவாதிக்கின்றனர்.

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டும் பெட்ரோல் பங்கை திறக்க மத்திய அரசு பரிசீலனை


டெல்லி: பெட்ரோல் பயன்பாட்டை குறைக்கும் வகையில் இரவு நேரத்தில் பெட்ரோல் பங்குகளை மூடுவது குறித்து மத்திய அரசு தீவிரமாக யோசித்து வருகிறது என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பல ஐடியாக்கள் குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறோம்

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பல ஐடியாக்கள் குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறோம். இரவு நேரத்தில் பெட்ரோல் பங்குகளை மூடுவது அதில் ஒன்று ஆகும்.

Sunday, September 1, 2013

டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: 17 வயது சிறார் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை!

டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில், 17 வயதுடைய சிறார் குற்றவாளிக்கு டெல்லி சிறார் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியில் 23 வயது மருத்துவ மாணவி ஒருவர், கடந்த  டிசம்பர் 16 ஆம் தேதி இரவு தனது ஆண் நண்பருடன் பேருந்தில் சென்றபோது பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். டிசம்பர் 17 ஆம் தேதி இந்த சம்பவம் தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டனர். டிசம்பர் 20 ஆம் தேதி பீகாரில் பதுங்கியிருந்த ஐந்தாவது குற்றவாளி தாகூர் கைது செய்யப்பட்டார்.
டிசம்பர் 21 ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவி, சப்தர்ஜங் மருத்துவமனையில் உதவி கோட்ட மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்தார். டிசம்பர் 22 ஆம் தேதி, இதில் தொடர்புடைய 6வது குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டது யாஸீன் பட்கல் அல்ல!-வழக்கறிஞர்

புதுடெல்லி: யாஸீன் பட்கல் என்று கூறி 2 தினங்களுக்கு முன்பு போலீஸ் கைது செய்ததாக கூறப்படும் நபர் உண்மையில்  யாஸீன் பட்கல் அல்ல என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இது குறித்து வழக்கறிஞர் எம்.எஸ். கான் கூறியது: யாஸீன் பட்கல் என்று கைது செய்யப்பட்ட நபர் முஹம்மது அஹ்மத் சித்தி பாபா ஆவார். இந்தியாவால் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள 12 நபர்களில் ஒருவராக இண்டலிஜன்ஸ் அதிகாரிகள் இவரை குறிப்பிடுவது தவறாகும். இவர்தாம் யாஸீன் என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு புலனாய்வு ஏஜன்சிகளுக்கு உண்டு. கைது செய்யப்பட்டவர் யாஸீன் என்பதை நிரூபிக்க அவர்களின் வசம் ஆதாரம் எதுவுமில்லை.
அஹ்மத் சித்தி பாபாவை யாஸீன் பட்கல் என்று பெயர் மாற்றியது இண்டலிஜன்ஸ் ஏஜன்சிகள் என்று அவரது உறவினரும், பெங்களூரைச் சார்ந்த வழக்கறிஞருமான அக்மல் ரஸ்வி நேற்று முன் தினம் குற்றம் சாட்டியிருந்தார். 10-வது வகுப்பு கூட வெற்றி பெறாத முஹம்மது அஹ்மத் சித்தி பாபாவை, பொறியியல் பட்டதாரியாக மாற்றியது மற்றும் 1983-ஆம் ஆண்டு பிறந்த அஹ்மதை 1973-ஆம் ஆண்டு பிறந்தார் என்று கூறுவது குறித்து அக்மல் ரஸ்வி விமர்சித்திருந்தார்.

Wednesday, October 3, 2012

நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக்கப்பட்ட ஆ.ராசா- கல்மாடி.. அப்போ ஊழல் விவகாரம்?

 Congress Nominates Raja Suresh Kalmadi
டெல்லி: நாடாளுமன்றத்தின் நிலைக்குழு உறுப்பினராக ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதாகி ஜாமீனில் உள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சரும் திமுக எம்பியுமான ஆ.ராசாவை காங்கிரஸ் நியமித்துள்ளது.

அதே போல காமன்வெல்த் ஊழலில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் சுரேஷ் கல்மாடியும் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். 
இதன்மூலம் இருவரது ஊழல்களையும் மத்திய அரசு லேசாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளது தெளிவாகிறது.
எரிசக்தித்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினராக ராசாவும், வெளி விவகாரத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் உறுப்பினராக கல்மாடியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

300 ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு "மாதாந்திர" நிதி உதவி!


கோழிக்கோட்டில் செயல்படும் "ஹோம் கேர் சென்டர்" மூலம், 300க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு மாதாந்திர நிதியாக தலா 1000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று  துவக்கப்பட்டது.
முதல் கட்டமாக, 4 வயதுக்கு மேற்பட்ட ஏழை மற்றும் பெற்றோரை இழந்த மாணவர்கள் இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.  தங்கள் வீட்டில் இருந்த படியே கல்வி பயிலும் வகையில், கண்ணூர் மற்றும் மலப்புரம் பகுதியை சேர்ந்த 300 மாணவவர்களின் பராமரிப்பு சிலவினங்களுக்காக மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

Sunday, September 23, 2012

இறைத்தூதருக்கு அவமதிப்பு : விழிப்புணர்வு "பிரச்சார" போராட்டம்!


இறைவனின் இறுதித்தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் விதமாக வெளியான அமெரிக்க திரைப்படத்தைக் கண்டித்து, உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
பல போராட்டங்களுக்கு உரிய அனுமதி மறுப்பதுடன், அமெரிக்க தூதரகங்களை நெருங்கவிட மறுக்கிறது, இந்திய அரசு. எனவே "குதாயீ மதத்கார்" என்ற பட்டதாரி வாலிபர்களின் அமைப்பு புதிய யுக்தியை கையாண்டு "டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக நுழைவு வாயில் வரை" நேரடியாக தனது போராட்டத்தை எடுத்து சென்றது.

கேரள போலீசின் இரட்டை நிலை : பொங்கியது முஸ்லிம்களின் கோப அலை!


மீலாது (நபிகள் நாயகம் பிறந்த நாள்) ஊர்வலத்தில் "ராணுவ உடை" அணிந்து சென்ற முஸ்லிம்கள் மீது "தேச துரோக வழக்கு" தொடர்ந்த கேரள போலீஸ்,
தற்போது கிருஸ்தவர்கள் ஊர்வலத்தில், ராணுவ உடை அணிந்து சென்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறது. கேரள போலீசின் இந்த பாரபட்சமான செய்தியாவது, இந்த வருட துவக்கத்தில் காசர்கோடு மாவட்டம் கஞ்சன்காடு "ஜும்ஆ மசூதி கமிட்டி"யின் சார்பில் மீலாது ஊர்வலம் நடந்தது.

அதில் கலந்துக்கொண்ட ஜுனைத், அர்ஷத், ஆரிப் ஆகிய மூன்று இளைஞர்கள், ராணுவ உடை அணிந்து மிடுக்கான வகையில் சென்றனர். ராணுவ உடை அணிந்து செல்வது "தேச துரோக குற்றம்" என பா.ஜ.க. இளைஞர் அணித்தலைவர் சுரேந்திரன் கொக்கரித்தார். மீடியாக்களும் இதை ஊதிப்பெரிதாக்கின.

Wednesday, September 19, 2012

மமதா அதிரடி... பிரதமர், அமைச்சர்களுடன் சோனியா இன்று அவசர ஆலோசனை

 Sonia Meet Top Leaders Discuss Mamata Banerjee Withdraw
டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகுவதாகவும், ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெறுவதாகவும், அமைச்சர்களை விலக்கிக் கொள்வதாகவும் மமதா பானர்ஜி அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சிறுபான்மை அரசாக மாறியுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள், பிரதமர் உள்ளிட்டோருடன் தலைவர் சோனியா காந்தி இன்று அவசர ஆலோசனை நடத்தவுள்ளார்.
நேற்று இரவு தனது அதிரடி முடிவை அறிவித்தார் மமதா பானர்ஜி. இதனால் காங்கிரஸ் தரப்பில் பெரிய அளவில் அதிர்ச்சி இல்லை என்ற போதிலும் கூட நெருக்கடியான நிலையில் ஆட்சி இருப்பதால் கட்சித் தலைவர் சோனியா காந்தி இன்று காலை 10 மணிக்கு அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டியுள்ளார். சோனியா காந்தியின் வீட்டில் நடைபெறும் இக்கூட்டத்தி்ல பிரதமர் மன்மோகன் சிங், ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். அகமது படேலும் கலந்து கொள்கிறார். இக்கூட்டத்தில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து பரிசீலிக்கப்படவுள்ளது.

Wednesday, September 12, 2012

பள்ளி மாணவனை கடத்த முயன்ற "ATS" போலீசுக்கு அடி-உதை!


டெல்லி ஜாமியா நகர் "ஷாஹீன் பாக்" பகுதியில், 16 வயது பள்ளி மாணவனை கடத்த முயன்ற, மும்பை "ATS" படையை சேர்ந்த போலீசாரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.
நேற்று (11/09) மாலை 6.30 மணியளவில் ஒரு வீட்டின் எதிரில், சப் இன்ஸ்பெக்டர்கள் ஆனந்த் மற்றும் விக்ரம் தலைமையில் "சாதாரண உடை"யில் இருந்த 7 பேர் கொண்ட ATS போலீசார் மறைந்து நின்றுக்கொண்டு, அந்த வீட்டை கண்காணித்தனர். அப்போது, டியூஷன் படிக்க செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்த 11ம் வகுப்பு பள்ளி மாணவன், ஹசன் அஹ்மத் (16) என்ற சிறுவனை வலுக்கட்டயாமாக காரில் கடத்த முயன்றனர்.

Sunday, September 9, 2012

முஸ்லிம்களை சீண்டி பார்க்கும் பால் தாக்கரே!


எனக்கு கோபம் வந்து விட்டால், முஸ்லிம்களை மகாராஷ்டிரம் உட்பட இந்தியாவில் எங்கும் விட்டு வைக்க மாட்டேன் என்று, 86 வயது கிழட்டு ரவுடி பால்தாக்கரே, தனது துவேஷ பேச்சுக்களால் முஸ்லிம்களை சூடேற்றிப்பார்க்கிறார்.
நேற்று (08/09) மதியம் வெளவந்த சிவசேனை கட்சியின் "சாம்னா" பத்திரிக்கைக்கு, அவர் அளித்த பேட்டி : முஸ்லிம்கள், முதன்முதலாக 1992ல் "பாபர் மசூதி" இடிப்புக்குப்பின்னர் வீதியில் இறங்கினர்.

உத்தரப்பிரதேசத்தில் இடிக்கப்பட்ட மசூதிக்காக மும்பை வீதிகளில் இறங்கியது ஏன்? என்று கேள்வி எழுப்பும் அவர்? அஸ்ஸாம் முஸ்லிம்களுக்காக "மும்பை ஆசாத் மைதானத்தில்"  நிகழ்த்திய வன்முறை, திட்டமிட்ட செயல் என்றார்.