Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts

Thursday, September 12, 2013

செப். 15 அண்ணா பிறந்த நாளில் 7 வருடம் கழிந்த ஆயுள் சிறைக்கைதிகளை விடுதலை செய்யவேண்டும்! – பாப்புலர் ஃப்ரண்ட்

சென்னை: செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளன்று 7 வருடம் கழிந்த ஆயுள் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநிலத் தலைவர் ஏ.எஸ். இஸ்மாயீல் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் விடுத்துள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது:
செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா அவர்களின்  பிறந்த நாளன்று, ஒவ்வொரு ஆண்டும் நன்னடத்தை விதிப்படி, கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவர்.
கடந்த தி.மு.க. ஆட்சியில், 2007ம் ஆண்டில்  16 ஆயுள்தண்டனை கைதிகளும், 2008ம் ஆண்டில் 1405 ஆயுள்தண்டனை கைதிகளும், 2009ம் ஆண்டில் 10 ஆயுள்தண்டனை கைதிகளும், 2010ம் ஆண்டில் 13 ஆயுள்தண்டனை கைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அதே போல் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், 1992ல் 230 ஆயுள்தண்டனை கைதிகளும், 1993ல் 132 ஆயுள்தண்டனை கைதிகளும் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Sunday, September 1, 2013

SDPI கட்சி நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம்


மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவித் தொகை குறித்து பா.ஜ.க பரப்பும் அவதூறு பிரச்சாரத்தை கண்டித்தும், கல்வியில் பின்தங்கியுள்ள தலித் மற்றும் முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை அதிகரித்து முறையாக வழங்கக்கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் ஆகஸ்ட் போராட்டம் என்ற பெயரில் போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று ஆகஸ்ட் 31 சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார். 

Monday, September 17, 2012

அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் "நாளை" அமெரிக்க தூதரக முற்றுகை போராட்டம்! : TNTJ பங்கேற்காது!

சென்னை:  முஹம்மது நபி அவர்களை இழிவுபடுத்தும் வகையில் சினிமாவை இயற்றிய யூதனை கண்டித்தும் அதற்கு துணை நிற்கும் உலக ரவுடி நாடான அமெரிக்காவை கண்டித்தும் நாளை மாலை 4 மணியளவில், அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளது.
உலக முஸ்லிம்கள் அனைவரையும் உலுக்கி கொதித்தெழ வைக்கும் வகையில் அமெரிக்க யூதன் பாசிலி,  முஹம்மது நபி அவர்களை இழிவுபடுத்தும் விதத்தில் திரைப்படம் தயாரித்துள்ளான். இதனை கண்டிக்க வேண்டுமென அமெரிக்க அரசிடம் கூறினால், அது அவரவர் தனிப்பட்ட கருத்து என முஸ்லிம் விரோத போக்கை கையாண்டுள்ளது. உலகின் பல பாகங்களிலும் அமெரிக்காவிற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளது. தமிழகத்திலும் அனைத்து இயக்கங்கள் சார்பில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. தற்போது முஸ்லிம் சமூகம் தங்களுடைய பலத்தை தெரிவிக்கும் வகையில் அனைத்து இயக்கங்களையும் ஒன்றினைத்து மாபெரும் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.  நாளை மாலை 4 மணியளவில் சென்னை இராயப்பேட்டை புதுக்கல்லூரியிலிருந்து புறப்பட்டு அமெரிக்க தூதரகம் நோக்கி முற்றுகை போராட்டம் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.
இதில் கீழ் கண்ட் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கெடுக்கவுள்ளன:

Saturday, August 25, 2012

மு.க.ஸ்டாலின்,திருமாவளவன் உட்பட அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் கலந்து கொண்ட பிரமாண்ட பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கமாக எஸ்.டி.பி.ஐ கட்சி இருந்து வருவது பாராட்டுக்குரியது என்று தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின்(எஸ்.டி.பி.ஐ) சார்பாக நேற்றைய தினம் இரவு சென்னை பெரியார் திடலில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் எஸ்.எம்.ரஃபீக் அஹ்மத், துணைத் தலைவர் ஏ.பிலால் ஹாஜியார், செயலாளர்கள் கே.செய்யது இப்ராஹீம், ஜி.அப்துல் ஸத்தார், வி.எம்.அபூதாஹிர், ஏ.செய்யது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

பாப்புலர் ப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் முஹமது யூசுப் காவல் துறை அதிகாரிகள் மீது தொடுத்த வழக்கில் நீதிமன்றம் பிறபித்த உத்தரவு

Tuesday, August 14, 2012

சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்களின் அறிக்கை

Freedom parade
சுதந்திர தினத்தை கௌவுரவிக்கும் விதமாக தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட, ரத்தம் சிந்திய தியாகிகளை போற்றும் விதமாகவும் பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்கும் விதமாகவும், போராடிப் பெற்றசுதந்திரத்தை பாதுகாக்க அனைத்துத் தரப்பு மக்களும் உறதிமொழி ஏற்கும் விதமாகவும், சுதந்திரப் போராட்ட நினைவலைகளை மக்கள் மனதில் பூத்துக்குலுங்கச் செய்யும் விதமாக தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தோம்.

அதன் ஒரு பகுதியாக கடந்த 2007 முதல் 2010 வரை மதுரை, கும்பகோணம் மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்தி வந்தோம். 2011 ஆகஸ்ட்ல் நெல்லையில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த தீர்மானித்திருந்தோம். ஆனால் சிறுபான்மை விரோதப் போக்குடன் செயல்பட்ட காவல்துறை நீதிமன்றத்தை அணுகக்கூட எங்களுக்கு வாய்ப்பு கிடைத்து விடாத அளவிற்கு கடைசி நேரத்தில் அனுமதியை ரத்து செய்தது.

இதுதான் கடைசி அவகாசம்: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ.தரப்புக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை


 Sc Notice Sasikala On Dmk Leader Plea
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தொடர்ந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பு பதிலளிக்கும் வகையில் 3 வாரங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த வழக்கின் விசாரணையை எப்படி இழுத்தடிக்க முடியுமோ அப்படி ஜெயலலிதா தரப்பு இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.

Friday, August 3, 2012

சுதந்திர தின அணிவகுப்பு -பாப்புலர் ஃப்ரண்ட் யின் கோரிக்கையை பரிசிலிக்குமாறு காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு


லஞ்சம் வாங்குபவர்கள் பற்றி புகார் கொடுக்கணுமா? இதைப் படிங்க

சென்னை: தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை எளிதாகத் தொடர்பு கொள்ள உதவும் இணையதளத்தை வாசர்களுக்குக் கொண்டு செல்லும் கடமையுணர்வுடன் இந்தத் தகவலை வெளியிடுகின்றோம்.
லஞ்சம் எங்கு எங்கு எல்லாம் தலைவிரித்து ஆடுகின்றதோ அங்கு எல்லாம் சட்டம் வளைந்து நெளிந்து போகின்றது. இதனால் தான் பல குற்றச் செயல்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது. இது அரசின் தவறு அல்ல. ஒரு சிலரின் தவறே. நமது நாடு லஞ்ச லாவண்யம் இன்றி நேர்மையாக செயல்பட்டாலே உலக அளவில் முதன்மை நாடாகத் திகழும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
அரசு அதிகாரி ஒருவர் தன் கடமையைச் செய்ய லஞ்சம் கேட்கிறார் என்றால் அவரைப் பற்றி எங்கு எப்படிப் புகார் அளிக்க வேண்டும் என்று தெரியவில்லையா. உடனே http://www.dvac.tn.gov.in/ என்ற தமிழக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் இணையதளத்திற்கு சென்று பார்க்கலாம். அங்கு லஞ்சம் குறித்து யாரிடம் புகார் தெரிவிக்கலாம் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் முதல் செல்போன் எண் வரை அத்தனையும் இந்த இணையதளத்தில் தெளிவாக உள்ளது.

Wednesday, July 18, 2012

சென்னை ரயில் நிலையங்களில் ரகசிய கேமராக்கள்


சென்னை: சென்னையில் உள்ள ரயில் நிலையத்தில் நடைபெறும் கடத்தல், வழிப்பறி போன்ற குற்றங்களை தடுக்க ஆங்காங்கே ரகசிய கேமிராக்களை பொருத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் குழந்தை கடத்தல், அரிசி கடத்தல், நகை பறிப்பு, பிக்பாக்கெட் போன்ற குற்றங்கள் வழக்கமாக நடைபெறுகின்றன. இதில் பணம் மற்றும் பொருட்களை இழக்கும் பயணிகள், ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தாலும், பெரும்பாலான குற்றவாளிகளை பிடிக்க முடிவதில்லை.



மேலும் ரயில் நிலையங்களில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார், கண்காணிப்பில் ஈடுபட்டாலும், மறைமுகமாக பல குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க முடிவதில்லை. இதையடுத்து ரயில் நிலையங்களில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், ஆங்காங்கே ரகசிய கேமராக்களை பொருத்த தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.

Saturday, July 14, 2012

தமிழகத்துக்கான ஹஜ் பயண ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதாகடிதம்

 Tamil Nadu Cm J Jayalalithaa Petit
சென்னை: தமிழகத்துக்கான ஹஜ் புனிதப் பயண ஒதுக்கீட்டை கூடுதலாக வழங்க ‌மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
ஐந்தாண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவதற்காக, தமிழ்நாடு ஹஜ் குழுமத்துக்கு 12 ஆயிரத்துக்கும் அதிகமானோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஆனால் மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழுமம், தமிழகத்துக்கு 2863 இடங்களை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.இந்த ஒதுக்கீடு மிகவும் குறைவானது என்று சொல்ல தேவையில்லை.

Wednesday, June 27, 2012

கல்வி உதவித்தொகை : வழிகாட்டும் அறக்கட்டளை

இந்த ஆண்டுக்கான மத்திய மாநில அரசுகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் கல்வி உதவித்தொகைகளை பெறுவது தொடர்பான வழிகாட்டும் அறக்கட்டளை சென்னையில் செயல்பட்டு வருகிறது.
இங்குஆரம்பக்கல்வி முதல் உயர்கல்வி வரைக்கும் பல்வேறு வழிகாட்டல்களை பெறலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 30.07.2012. விரிவான தகவல்களுக்கும் விவரமான வழிகாட்டலுக்கும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

Friday, June 15, 2012

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி, ஆனால் அமைச்சர்கள் பீதி...!

 Admk Ll Secure Pudukkottai But
புதுக்கோட்டை: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் தான் வெற்றி பெறுவார் என்பது உறுதியாகிவிட்டது. இருப்பினும் சில அமைச்சர்கள் பீதியில் உள்ளனராம்.
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் வெற்றி பெறப் போவது யார் என்று சின்ன பையனைக் கேட்டால் கூட அதிமுக தான் என்று சொல்வான். தொகுதியின் உள்ள 1,94,680 வாக்காளர்களில் 1,43,277 பேர் தங்களது வாக்குகளைப் வெற்றிகரமாக பதிவு செய்தனர்.
புதுக்கோட்டையில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை நடந்தது. அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் 71,498 வாக்கு வித்தியாத்தில் தான் வென்றுள்ளார். அதிமுக கணக்குப் போட்டபடி வாக்கு வித்தியாசம் 1 லட்சத்தை தாண்டவில்லை.

Thursday, June 14, 2012

வஞ்சிக்கப்படும் முஸ்லிம்கள் : என்னமோ நடக்குது; ஏதோ நடக்கப்போகுது!

மத்திய அரசு இட ஒதுக்கீடும் விஷயம் ஒரு புறமென்றால், தமிழக அரசு ஏற்கனவே உள்ள ஒதுக்கீட்டையும் அமல் படுத்த மறுக்கிறது. தமிழக அரசு ஒப்பந்தப் பயிற்சி மருத்துவர் பணி நியமனத்தில் மிகப்பெரிய துரோகத்தை முஸ்லிம்களுக்கு இழைத்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் 1349 மருத்துவர்கள் அரசு மருத்துவப் பணிக்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. 3.5சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 47 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் மட்டும் இல்லாமல் பொதுப்பிரிவில் தகுதியான முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட முடியும். 

Monday, May 21, 2012

காற்றாலை மின் உற்பத்தி தொடர்ந்து அதிகரிப்பு- மின்வெட்டு மேலும் குறையும்

 Wind Power Goes High Tn
சென்னை: தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மின்வெட்டு அளவு குறையும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இருப்பினும் தலைநகர் சென்னையில் வழக்கம் போல தொடர்ந்து பெரும்பாலான பகுதிகளில் வழக்கம் போல 2 மணி நேர மின்வெட்டு அமலிலேயே உள்ளது.
அதேபோல தமிழகத்தின் பிற பகுதிகளிலும் பல மணி நேர மின்வெட்டு என்பதிலிருந்து பெரிய அளவில் மாற்றம் இல்லை.

கடந்த மாதம் காற்றாலை மின் உற்பத்தி மூலம், 2500 மெகாவாட்டுக்கும் மேல் கூடுதலான மின்சாரம் கிடைத்தது. இதனால் படிப்படியாக மின்வெட்டு ஓரளவு குறைந்தது.

Thursday, May 17, 2012

புதுக்கோட்டை தேர்தலில் தேமுதிகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு

 Cpm Support Dmdk Pudukkottai Bypoll
சென்னை: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் ஆளும் கட்சி அதிகாரபலத்தையும், பணபலத்தையும் பயன்படுத்தி அராஜகம் செய்வார்கள் என்பதால் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக சில எதிர்க்கட்சிகள் அறிவித்து விட்டன.

ஆளும் கட்சியின் தேர்தல் தில்லுமுல்லுகளையும், அதிகார பலத்தையும், பணபலத்தையும், மக்களைத் திரட்டி எதிர்கொள்வதற்குப் பதிலாக, தேர்தலில் போட்டியிடாமல் விலகி இருப்பது சரியான அரசியல் அணுகுமுறையாக இருக்காது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது.

Wednesday, May 16, 2012

கடும் மின் தட்டுப்பாட்டில் மக்கள்.. அதிமுக அரசின் ஓராண்டு சாதனைக்கு ரூ.25 கோடியில் விளம்பரம்!

 With Rs 25 Cr Jaya Breaks Record For One Day Advt Spend
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழக முதல்வராக பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த ஓராண்டு நிறைவு விழா விளம்பரங்களுக்காக மட்டும் அரசு ரூ.25 கோடி செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். ஓராண்டு நிறைவு விழாவையொட்டி அதிமுக அரசு நாட்டின் அனைத்து நாளிதழ்களின் முதல் பக்கத்தில் பெரிய விளம்பரத்தைக் கொடுத்துள்ளது. அரசின் சாதனைகளை விளக்கிக் கூறும் இந்த விளம்பரங்களுக்காக மட்டும் அதிமுக அரசு ரூ.25 கோடி செலவு செய்துள்ளது என்று கூறப்படுகிறது.

புதுக்கோட்டை இடைத்தேர்தலுக்கான தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேன் : விஜயகாந்த்

 Zakir Hussain Dmdk Candidate Pudukottai By Poll
சென்னை: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் ஜாகீர் உசேன் நிறுத்தப்படுவார் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துக்குமரன் எம்.எல்.ஏ. சாலை விபத்தில் காலமானார். இதைத் தொடர்ந்து ஜூன் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டமான் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த முறை போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட், திமுக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துவிட்டன.

Sunday, May 13, 2012

10 நாட்களில் குடும்ப அட்டை திட்டம்!

சென்னை, மே 13- ரேஷன் பொருட்கள் எதுவும் வேண்டாம்; முகவரியை உறுதிப்படுத்த மட்டுமே குடும்ப அட்டை தேவை என்றால், புதிய அட்டைகள் 10 நாளில் வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இதுபோன்று, தட்கல் முறையில் கார்டு தேவைப்படுபவர்கள், 2 அல்லது 3 ஆண்டுகள் அந்த பகுதியில் இருந்ததற்கான இருப்பிட சான்றிதழை மட்டும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். மண்டல அதிகாரிகள் அந்த முகவரிக்கு வந்து பரிசோதனை செய்வர். உண்மையில் அதே முகவரியில் இருப்பது உறுதி செய்யப்பட்டால், உடனே தட்கல் முறையில் ரேஷன் கார்டு வழங்கப்படும்.

Tuesday, May 8, 2012

கேரள முதல்வர் தமிழர்களை இளிச்சவாயர்களாக நினைக்கிறார்: உதயகுமார் தாக்கு


நெல்லை: கேரளாவில் அணு மின் நிலையம் அமைக்க அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி தயாராக இருக்கிறாரா என்று கூடங்குளம் போராட்டக்குழு தலைவர் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் குழு மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 4வது கட்டமாக கடந்த 1ம் தேதி முதல் போராட்டக்குழுவினர் 24 பேர் காலவரையற்ற உண்ணாவிரத்தை தொடங்கினர். 7வது நாளான நேற்று 302 பெண்கள் உள்பட 376 பேர் உண்ணாவிரதம் இருந்தனர். இவர்களில் 15 பெண்கள் மயங்கினர். அவர்கள் இடிந்தகரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இன்னும் 10 நாட்களில் மின் உற்பத்தி தொடங்கும் என்ற முதல்வர் அறிவிப்பை அடுத்து போராட்டக்குழுவினர் அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தினர்.