டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக மோஷினா கித்வாய் நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது.
ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு வழியாக பிரணாப் முகர்ஜியை முடிவு செய்துவிட்ட காங்கிரஸ் இப்போது துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.
தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் ஹமீத் அன்சாரியின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும். இதற்கான தேர்தல் ஆகஸ்ட் 7ம் தேதி நடக்கவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பார்கள். ஆனால் துணை ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள 790 எம்.பிக்கள் மட்டுமே ஓட்டுப் போட முடியும்.
ஜனாதிபதி தேர்தலில் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பார்கள். ஆனால் துணை ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள 790 எம்.பிக்கள் மட்டுமே ஓட்டுப் போட முடியும்.
