Wednesday, July 4, 2012

துணை ஜனாதிபதி தேர்தல்.. காங்கிரஸ் வேட்பாளர் மோஷினா கித்வாய்?

 Mohsina Kidwai Saifuddin Soz Lobby For Vice Presi Post
டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக மோஷினா கித்வாய் நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது.
ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு வழியாக பிரணாப் முகர்ஜியை முடிவு செய்துவிட்ட காங்கிரஸ் இப்போது துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.
தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் ஹமீத் அன்சாரியின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும். இதற்கான தேர்தல் ஆகஸ்ட் 7ம் தேதி நடக்கவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பார்கள். ஆனால் துணை ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள 790 எம்.பிக்கள் மட்டுமே ஓட்டுப் போட முடியும்.

நெல்லை ஹோட்டலில் ரூ.2.75க்கு அன்லிமிடட் சாப்பாடு: குவிந்த மக்கள்


நெல்லை: நெல்லையில் உள்ள ஒரு உணவகத்தில் ரூ. 50 மதிப்புள்ள மதிய உணவை திடீரென ரூ.2.75க்கு வழங்கியதால் அங்கு 1,500 பேர் குவிந்தனர்.
தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக ஏறிவிட்டதால் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுவிட்டது. இதனால் ஒரு வேளை நல்ல உணவு எங்காவது இலவசமாகக் கிடைத்தால் கூட மக்கள் அதை ருசிக்க தயக்கமின்றி குவிந்து விடுகின்றனர். அந்த அளவுக்கு விலைவாசி மக்களை வாட்டி வதைக்கிறது.

Tuesday, July 3, 2012

ஹோர்முஸ் ஜலசந்தியை இழுத்து மூடுகிறது ஈரான்.. நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்தது!

 Iran Drafts Bill Block Hormuz Gulf Oil Tankers
டெஹ்ரான்: ஆசிய, ஐரோப்பிய நாடுகளின் எண்ணெய் வர்த்தகத்துக்கு முதன்மையான பயன்படுத்தப்படும் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதற்காக ஈரான் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அணு ஆயுதத் தயாரிப்பில் ஈரான் ஈடுபடுகிறது என்பது அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகளின் புகார். இதனால் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தன. இதனை ஏற்றுக் கொண்டு ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை படிப்படியாக குறைத்துக் கொள்ளுமாறு இந்தியா,சீனா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்து வந்தது. அமெரிக்காவுக்கான ஈரானுடனான வர்த்தக உறவுகளை இந்தியா உள்ளிட்ட நாடுகள் குறைத்துக் கொள்ளவும் செய்தன.

கொடூர கொலைகாரன் "மோடி" : பா.ஜ.க.வினர் புதிய போஸ்டர் !


நரேந்திர மோடிக்கு எதிராக,  பா.ஜ.க.வின்  முக்கிய தலைவரும் முன்னாள் குஜராத் முதலமைச்சருமான, கேஷுபாய் பட்டேல் ஆதரவாளர்கள் போஸ்டர் யுத்தம் நடத்தி வருகின்றனர்.
"கொடுமைக்கார மாமியாராக" சித்தரித்து மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டருக்கு கிடைத்த அமோக ஆதரவைத்தொடர்ந்து, தற்போது, நரேந்திர மோடியை "கொடூர கொலை காரன்" என்று போஸ்டர் போட்டுள்ளனர். இம்முறை, நரேந்திர மோடிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், பா.ஜ.க. கட்சியையும் குற்றம் சுமத்தி வாசகம் போட்டுள்ளனர்.  

Monday, July 2, 2012

முஸ்லிம்கள் மீது தொடரும் தாக்குதல் : நேற்று காஜி பூரில்!


உத்தரபிரதேசத்தில் ஆட்சி மாறியுள்ளதே தவிர, முஸ்லிம்களின் மீது ஏவப்படும் அடக்குமுறைகள் குறைந்த பாடில்லை.
சரியாக முப்பது நாட்களுக்கு முன், மதுரா மாவட்டம் "கோசி கோலான்" கிராமத்தில்,  குடி தண்ணீர் பிரச்சினையில் 6 முஸ்லிம்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. பலரும் காயமடைந்த அந்த மோதலில், முஸ்லிம் அல்லாத எவருக்கும் எள் முனை அளவு சேதமோ, காயமோ ஏற்படவில்லை.

பிரணாப் வேட்புமனுவை ஏற்பதில் சிக்கல்- மனு பரிசீலனை திடீரென நாளைக்கு ஒத்திவைப்பு

 Prez Poll Sangma Challenges Pranab
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் புதிய திருப்பமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியின் மனுவை ஏற்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வேட்பு மனு பரிசீலனை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் முடிந்து இன்று வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது பிரணாப் முகர்ஜியை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக, பிஜூ ஜனதாதளம் மற்றும் பாஜக ஆதரவு வேட்பாளரான சங்மா திடீரென ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.

Sunday, July 1, 2012

இஸ்லாத்தை ஏற்றதால், பெண் எம்.எல்.ஏ. மீது கொலை வெறி தாக்குதல்! "கள்ளக்காதல்" களங்கம்!!


அஸ்ஸாம் மாநிலத்தின் "போர்கோலா" சட்டமன்ற பெண் உறுப்பினர் "ரூமி நாத்". 2006 மற்றும் 2011 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், இளம் பெண் ரூமி நாத்.
கணவர் ராகேஷ் குமாருடன் 2 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தனிமையில் வாழ்ந்து வந்த ரூமி நாத் எம்.எல்.ஏ., இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதுடன் "ஜாக்கி ஜாக்கீர்" என்பவரை திருமணம் செய்துக்கொண்டு அவருடன் வாழ்ந்து வந்தார்.

இந்த திருமணம் காரணமாக தற்போது "கரு"த்தரித்தும் உள்ளார்,ரூமி. இந்த விஷயம், காவல் துறை, ஊடகம், நீதிமன்றம் என்று, ஊரறிய வெளிவந்த விஷயம் என்றாலும், முன்னாள் கணவர் ராகேஷ் விவாகரத்து கொடுக்க மறுப்பதுடன், ரூமிக்கு பல வழிகளில் தொல்லைகளை கொடுத்து வந்தார்.

மேற்கும் வங்கம் : மம்தாவின் ஜம்பம்


27% முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட மேற்கு வங்கத்தில், அரசுப்பணிகளில் முஸ்லிம்களுக்கு பட்டை  நாமம் போட்டுள்ளார், மம்தா பானெர்ஜி.
அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 651 பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணை நேற்று முன்தினம் (29/06) வெளியிடப்பட்டது.  அதில், முஸ்லிம்களுக்கு 23 பணியிடங்கள் மட்டுமே  ஒதுக்கப்பட்டுள்ளது.  34 ஆண்டுகால கம்யூனிச ஆட்சிக்கு முடிவு கட்டி, முதல்வராகியுள்ள மம்தா பானெர்ஜி, முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பில் உரிய இடம் தருவேன் என்று தேர்தல் வாக்குறுதி வழங்கினார்.

Saturday, June 30, 2012

புதுடெல்லி : பள்ளிவாசலை புதுப்பிக்க பல சமய மக்கள் ஆதரவு!

டெல்லி "மட்டியா மஹல்" சட்டசபை தொகுதிக்குட்பட்ட, பண்டித் வார்டின், ஷங்கர் தெருவில் உள்ளது, வக்ப் போர்டுக்கு சொந்தமான பழமையான "கஜூர் வாலி மஸ்ஜித்". இந்த பள்ளிவாசலுக்கு "சாந்தினி மஸ்ஜித் " என்ற மற்றொரு பெயரும் உண்டு. முக்கிய பகுதியில் இருக்கும் இந்த பள்ளிவாசல், பல வருடங்களாக பராமரிப்பின்றி குப்பை கூளங்கள் கொட்டுமிடமாக மாறியுள்ளதை கண்டு, அந்த பகுதியை சேர்ந்த டெல்லி மாநகராட்சி கவுன்சிலர், ராகேஷ் குமார் உள்ளிட்ட பல ஹிந்து சமுதாய பிரமுகர்கள் கவலை கொள்கின்றனர். 

Thursday, June 28, 2012

எப்படி நடக்கிறது இந்தியாவின் ஜனாதிபதி தேர்தல்...?‏


உலகின் மிகப் பெரிய குடியரசு இந்தியா என்பதும் இந்தியாவின் குடியரசுத்தலைவருக்கான  தேர்தல் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறதுஎன்பதும்குடியரசுத் தலைவருக்கான  வேட்பாளர்கள் திரு.பிரனாப் முகர்ஜியும்திரு.சங்கமாவும் என்பதும் நாம் அனைவரும்  அறிவோம். ஆனால்,குடியரசுத்தலைவருக்கான தேர்தல் எப்படி நடக்கிறது அதற்கான விதிமுறைகள்என்னஇந்த சந்தேகங்களை தெளிவு படுத்தும் நோக்கமே இந்த பதிவு….
குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் யார் போட்டியிடலாம் ?
இந்திய அரசியலமைப்பின் படி, குடியரசுத் தலைவருக்கான தேர்தலில்போட்டியிட பின் வரும் அனைத்து தகுதிகளும் பெற்றிருக்க வேண்டும்:

நீங்கள் கைதானால், போலீஸ் காவலிலிருந்து உடனடியாக விடுதலை பெறுவது எப்படி?


பிடிப்பாணை வழக்குகளில், பிடிப்பாணையில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பார்த்து, அதற்கேற்ப பிணையாளிகளுடன் பிணைமுறி எழுதித்தர வேண்டும் (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு. 71).
சுமத்தப்பட்டுள்ள குற்றம் பிணையில் விடுவிக்கப்படக் கூடியதாகவும், பிடிப்பாணை இல்லாமல் கைது செய்யப்பட்டிருந்தாலும், பிணைமுறி எழுதிக்கொடுத்த பின்பு உங்களை பிணையில் விடுவிக்கும் படி காவல் நிலையப் பொறுப்பில் உள்ள காவல்துறை அதிகாரியிடம் கேட்கலாம்.
ஒரு நபரிடம் பிணையாளிகள் இல்லாமல் பிணைமுறிவு எழுதி வாங்கிக் கொண்டு, பிணையில் விடுவிப்பதற்கு காவல்துறை அதிகாரிக்கு தன் விருப்புரிமை அதிகாரம் உண்டு (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 436).
  • உடனடியாக உங்களை பிணையில் விடுவிக்காவிட்டால் உங்களது வழக்கறிஞருக்கோ, நண்பர் அல்லது உறவினருக்கோ தொலைபேசியில் தகவல் கூற உங்களுக்கு உரிமை உண்டு. உங்களது வழக்கறிஞரிடம் பிணையாளிகளாக வரக்கூடிய நபர்களின் பெயர், முகவரிகளைத் தரவும், உங்களுக்கு வழக்கறிஞர் இல்லாவிட்டால், நண்பர் அல்லது உறவினருக்கு கீழ்கண்ட விவரங்களைத் தெரிவிக்கவும்.
  • நீங்கள் ஆஜராகப் போகும் குற்றவியல் நீதிமன்றம்.
  • நீதிமன்றம் துவங்கும் நேரம்.
  • உங்களுக்காக பிணையாளிகளாக வரத்தயாராக உள்ளவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரச்செய்வது.
  • முடிந்தால், ஒரு வழக்கறிஞரை தொடர்புக் கொள்ளச் சொல்வது.
நீதிமன்றத்திற்குச் செல்லும் முன்பாக, இத்தகையவற்றைக் கவனித்துக் கொண்டால், தேவையில்லாமல் காவலில் வைக்கப்படுவதிலிருந்து நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள்.

Wednesday, June 27, 2012

கல்வி உதவித்தொகை : வழிகாட்டும் அறக்கட்டளை

இந்த ஆண்டுக்கான மத்திய மாநில அரசுகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் கல்வி உதவித்தொகைகளை பெறுவது தொடர்பான வழிகாட்டும் அறக்கட்டளை சென்னையில் செயல்பட்டு வருகிறது.
இங்குஆரம்பக்கல்வி முதல் உயர்கல்வி வரைக்கும் பல்வேறு வழிகாட்டல்களை பெறலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 30.07.2012. விரிவான தகவல்களுக்கும் விவரமான வழிகாட்டலுக்கும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

Saturday, June 23, 2012

6.30 லட்சம் ஓட்டுக்களுடன் வெற்றியின் விளிம்பில் பிரணாப்-சங்மாவிடம் வெறும் 3 லட்சம் ஓட்டுக்களே!

India Pranab Mukherjee Flies High With 6 29 Lakh Votes
சென்னை: ஐக்கிய முற்போக்குக்கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அவருக்கு ஆதரவாக இதுவரை 6.29 லட்சம் ஓட்டுக்கள் திரண்டுள்ளன. அதேசமயம், பாஜக, அதிமுக உள்ளிட்ட நான்கு கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடும் பி.ஏ.சங்மாவுக்கு வெறும் 3.10 லட்சம் வாக்குகளே சேர்ந்துள்ளன.
காங்கிரஸ் சார்பில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜிக்கு இதுவரை 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தக் கட்சிகளின் மூலம் அவருக்கு இதுவரை 6.29 லட்சம் ஓட்டுக்கள் சேர்ந்துள்ளன.

Saturday, June 16, 2012

அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கி, மீண்டும் முஸ்லிம்களை கருவறுக்க திட்டம்?!


முஸ்லிம் என்ற பெயரை தவிர அப்துல் கலாம் அவர்களால், முஸ்லிம்களுக்கு ஒரு பலனும் இருந்ததுமில்லை இருக்கப்போவதும் இல்லை.
2002ல் குஜராத் கலவரம் நிகழ்ந்த அதே ஆண்டு, பா.ஜ.க.,வினால்  ஜனாதிபதியாக்கப்பட்ட அப்துல் கலாம், குஜராத் இன அழிப்புக்கு எதிராக, ஒரு துரும்பை கூட நகர்த்தவில்லை. எனவே தான், அடுத்தடுத்து அப்துல் கலாமையே ஜனாதிபதியாக்க பா.ஜ.க. முயற்சித்து வருகிறது. 


கடந்த 2007 ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதுபதி தேர்தலிலும் அப்துல் கலாமையே கடைசி வரை முன் நிறுத்தியது பா.ஜ.க.  இப்போது, மம்தா குரல் மூலம் பா.ஜ.க. தான், இந்த திட்டம் வகுத்து வருகிறது.  முஸ்லிம் சமூகத்துக்கு முற்றிலும் எதிரியாக உள்ள பா.ஜ.க., அப்துல் கலாமை ஆதரிப்பதில் காரணங்கள், மிக அதிகம். 

முஸ்லிம்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் : கர்நாடக உயர் நீதிமன்றம் பாங்கு சொல்ல தடை!

இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை ஒலி பெருக்கியை பயன் படுத்தக்கூடாது, என்ற விதியை சுட்டிக்காட்டி,  இனி, காலை ஸுபுஹ் தொழுகைக்கு ஒலி பெருக்கியில் பாங்கு சொல்லுவது கூடாது, என்று கர்நாடக மாநில ஹைகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
மாநிலம் முழுவதும் வரும் ஜூன் 17 முதல் இந்த உத்தரவை அமல் படுத்த, போலீசுக்கு அட்வகேட் ஜெனரல் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள அனைத்து மசூதி நிர்வாகத்துக்கும் போலீஸ் கமிஷனர் காலை பாங்குக்கு தடை விதித்துள்ளார்.   பெங்களூருவில் செயல்படும் "ஜெய் நகர் சமிதி" என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கில் சொல்லப்பட்ட இந்த தீர்ப்பு குறித்து, கர்நாடக மாநில ஜமியதுல் உலமா தலைவர், முப்தி இப்திகார் அஹ்மத் உள்ளிட்ட முஸ்லிம்கள் மேல் முறையீடு செய்ய  ஆலோசித்து   வருகின்றனர்.

Friday, June 15, 2012

ஜனாதிபதி பதவி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி: சோனியா அறிவிப்பு!

 Upa Announce Pranab Mukherjee As President
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இன்று மாலை கூடிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கூட்டத்தி்ல அவர் பிரணாபின் பெயரை முன்மொழிந்தார். இதை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.
இதையடுத்து ஜூன் 24ம் தேதி நிதியமைச்சர் பதவியை பிரணாப் முகர்ஜி ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி, ஆனால் அமைச்சர்கள் பீதி...!

 Admk Ll Secure Pudukkottai But
புதுக்கோட்டை: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் தான் வெற்றி பெறுவார் என்பது உறுதியாகிவிட்டது. இருப்பினும் சில அமைச்சர்கள் பீதியில் உள்ளனராம்.
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் வெற்றி பெறப் போவது யார் என்று சின்ன பையனைக் கேட்டால் கூட அதிமுக தான் என்று சொல்வான். தொகுதியின் உள்ள 1,94,680 வாக்காளர்களில் 1,43,277 பேர் தங்களது வாக்குகளைப் வெற்றிகரமாக பதிவு செய்தனர்.
புதுக்கோட்டையில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை நடந்தது. அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் 71,498 வாக்கு வித்தியாத்தில் தான் வென்றுள்ளார். அதிமுக கணக்குப் போட்டபடி வாக்கு வித்தியாசம் 1 லட்சத்தை தாண்டவில்லை.

Thursday, June 14, 2012

கடும் அச்சத்தில் உள்ளனர் "கண்டீலா" முஸ்லிம்கள்!


உத்தர பிரதேசம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ளது "கண்டீலா" கிராமம்.  சிறிய கிராமமான இங்கு 70 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இங்கு "காசிமுல் உலூம்" என்ற பெயரில் கடந்த 3 ஆண்டுகளாக மதரசா ஒன்று செயல்பட்டு வருகிறது. உள்ளூர் மாணவர்கள் உட்பட பல வெளியூர் மாணவர்களும் தங்கி படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் ஆண்டு விழா வரும் 17ந்தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு, போஸ்டர் மற்றும் நோட்டீஸ்களும் அச்சிடப்பட்டன. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக வெளியூரிலிருந்து சில ஆலிம்களை அழைக்கவும் முடிவு செய்யப்பட்டது. 


நேற்று மக்ரிப் தொழுகையின்போது உள்ளூரை சேர்ந்த 300 குண்டர்கள் மதரசாவை சூழ்ந்து கொண்டு, மதரசாவின் முதல்வர், காரி குலாம் ரப்பானியை நோக்கி ஆவேசமாக திட்ட ஆரம்பித்தனர்.  இந்த மதரசாவில் விழா நடத்தக்கூடாது, அப்படியே நடத்துவது என்றாலும் வெளியூரிலிருந்து எவரையும் அழைக்கக்கூடாது, போஸ்டர் ஓட்டக்கூடாது, ஒலிபெருக்கியை பயன்படுத்தக்கூடாது போன்ற ஏகப்பட்ட "கூடாது" நிபந்தனைகளை விதித்தனர். விளக்கம் சொல்ல முற்பட்ட போது, கடும் கலவர சூழலை உருவாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். 

வஞ்சிக்கப்படும் முஸ்லிம்கள் : என்னமோ நடக்குது; ஏதோ நடக்கப்போகுது!

மத்திய அரசு இட ஒதுக்கீடும் விஷயம் ஒரு புறமென்றால், தமிழக அரசு ஏற்கனவே உள்ள ஒதுக்கீட்டையும் அமல் படுத்த மறுக்கிறது. தமிழக அரசு ஒப்பந்தப் பயிற்சி மருத்துவர் பணி நியமனத்தில் மிகப்பெரிய துரோகத்தை முஸ்லிம்களுக்கு இழைத்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் 1349 மருத்துவர்கள் அரசு மருத்துவப் பணிக்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. 3.5சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 47 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் மட்டும் இல்லாமல் பொதுப்பிரிவில் தகுதியான முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட முடியும். 

அணு உலை என்ன? அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலும் தயாரிப்போம்ல..: ஈரான் அதிரடி

Iranடெஹ்ரான்: ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரித்து வருவதாக குற்றம்சாட்டி அந்நாட்டின் மீது அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பொருளாதாரத் தடையை விதித்திருக்கும் நிலையில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலையும் அந்நாடு தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானின் அணு ஆயுதத்தால் அலறிப் போய் இருக்கும் இஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கும் என்ற நிலை இருந்தது. இஸ்ரேலின் கோபத்தை கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்காதான் தடுத்து பொருளாதாரத் தடை விதித்தது. பின்னர் பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கிறது.